• Login
Tuesday, July 8, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“எந்த எல்லைகளும் கண்ணுக்குத் தெரியவில்லை” – விண்வெளியில் இருந்து பிரதமரிடம் பேசிய சுபான்ஷூ சுக்லா!

GenevaTimes by GenevaTimes
June 28, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
“எந்த எல்லைகளும் கண்ணுக்குத் தெரியவில்லை” – விண்வெளியில் இருந்து பிரதமரிடம் பேசிய சுபான்ஷூ சுக்லா!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 28, 2025 10:02 PM IST

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்யவுள்ள சுபான்ஷூ சுக்லா ஓரிரு நாளில் இந்திய மாணவர்களுடன் உரையாடுவார் எனக் கூறப்படுகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாடினார்.

டிராகன் விண்கலம் மூலம் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு 14 நாட்கள் தங்கியிருக்க திட்டமிட்டுள்ள வீரர்கள், பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய வீரர் சுக்லா உடன் காணொளியில் உரையாடிய பிரதமர் மோடி, சுபான்ஷூ வெகு தொலைவில் இருந்தாலும் இந்தியர்களின் இதயத்திற்கு அவருடன் நெருக்கமாக இருப்பதாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய சுபான்ஷூ, பிரதமர் மோடி மற்றும் 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்கு நன்றி கூறினார். இந்த தருணத்தில் இந்தியராக பெருமை கொள்வதாகவும் சுபான்ஷூ நெகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் “விண்வெளியில் இருந்து உலகை பார்த்ததும் ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுதான் எனத் தோன்றியது. இங்கிருந்து பார்க்கும்போது எந்தவொரு எல்லைகளும் கண்ணுக்குத் தெரியவில்லை. மாநிலங்களும் இல்லை, நாடுகளும் இல்லை. நாமெல்லாம் மனிதநேயத்தின் ஓர் அங்கம். உலகமே நமது வீடு, நாம் அங்கு வசித்து வருகிறோம். வரைபடத்தில் காண்பதை விட விண்வெளியில் இருந்து மிகவும் பிரமாண்டமாக இந்தியா காட்சியளிக்கிறது.” என்றும் சுபான்ஷூ சுக்லா பேசினார்.

சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா தேசியக் கொடியின் பின்னணியில் பிரதமர் மோடியுடன் பேசினார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்யவுள்ள சுபான்ஷூ சுக்லா ஓரிரு நாளில் இந்திய மாணவர்களுடன் உரையாடுவார் எனக் கூறப்படுகிறது.

இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக விமானப்படை கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். இதையடுத்து ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு 41 ஆண்டுகள் கழித்து இரண்டாவது இந்தியராக விண்வெளிக்குச் சென்ற சுபான்ஷு சுக்லா, மூவர்ணக் கொடியுடன் பயணிப்பது குறித்து பெருமிதம் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

June 28, 2025 10:01 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“எந்த எல்லைகளும் கண்ணுக்குத் தெரியவில்லை” – விண்வெளியில் இருந்து பிரதமரிடம் பேசிய சுபான்ஷூ சுக்லா!

Read More

Previous Post

செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை : வீட்டில் எந்த திசையில் நடவேண்டும் தெரியுமா?

Next Post

முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சு சொதப்பியது எப்படி? – பிரசித் கிருஷ்ணா ஓபன் டாக் | i take full responsibility for my failure says team india bowler prasidh krishna

Next Post
முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சு சொதப்பியது எப்படி? – பிரசித் கிருஷ்ணா ஓபன் டாக் | i take full responsibility for my failure says team india bowler prasidh krishna

முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சு சொதப்பியது எப்படி? - பிரசித் கிருஷ்ணா ஓபன் டாக் | i take full responsibility for my failure says team india bowler prasidh krishna

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin