• Login
Tuesday, July 8, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தாய்லாந்து பிரதமரை பதவி விலகக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 28, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
தாய்லாந்து பிரதமரை பதவி விலகக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பேங்காக்:

தாய்லாந்துப் பிரதமர் பெத்தோங்தார்ன் ‌ஷினாவாட்டைப் பதவி விலகும்படி கோரி பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று தலைநகர் பேங்காக்கில் கூடியுள்ளனர்.

கம்போடியாவுடன் எல்லைத் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து பெத்தோங்தார்னின் அரசாங்கத்துக்கு எதிரான சினம் வலுத்துள்ளது.

2023ஆம் ஆண்டு பியு தாய் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசாங்கத்துக்கு எதிராக முதன்முறையாக மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் மூண்டுள்ளது.

போர் நினைவிடமான விக்டரி நினைவுச்சின்னத்தில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடிகளை அசைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கடந்த இருபது ஆண்டுகளாக ‌ஷினாவாட்டின் ஆதரவுபெற்ற அரசாங்கத்தை எதிர்த்து வரும் ஆகப் பெரிய தேசியவாத ஆர்வலர்கள் கூட்டணி தாய்லாந்தின் ஒன்றுபட்ட சக்தி ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தது.

இதற்குமுன் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களால் அரசாங்கங்கள் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. ஆனாலும் அவற்றால் ஏற்பட்ட அழுத்தம் 2006, 2014ஆம் ஆண்டுகளில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு இட்டுச்சென்றது.

தாய்லாந்தில் நிலவும் அரசியல் குழப்பம் ஏற்கெனவே தத்தளித்துக்கொண்டிருக்கும் நாட்டின் பொருளாதார மீட்சியை மேலும் சேதப்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒன்றுகூடல் குறித்து அக்கறை இல்லை என்ற திருவாட்டி பெத்தோங்தார்ன், அனைத்தும் அமைதியான முறையில் நடைபெறுவதை மட்டும் உறுதிசெய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

“அது மக்களின் உரிமைக்கு உட்பட்டது எனவே நான் எதிர்க்கப்போவதில்லை,” என்றார் அவர்.

முன்னாள் கட்சியான பூம்ஜய்தாய் கட்சி கடந்த வாரம் வெளியேறியதை அடுத்து பெரும்பகுதி கூட்டணியின் ஒரு சிறிய அங்கத்தை பெத்தோங்தார்ன் கட்டுக்குள் வைத்துள்ளார்.

தாய்லாந்து நாடாளுமன்றம் அடுத்த வாரம் கூடும்போது அவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Read More

Previous Post

இந்தியா – பாக். போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் கிடைக்காது: மீண்டும் சீண்டும் ட்ரம்ப்! | I will not get the Nobel Peace Prize for stopping the India pakistan war says Trump again

Next Post

Tamilmirror Online || இலங்கையர் மூவர் அகதிகளாக தஞ்சம்

Next Post
Tamilmirror Online || இலங்கையர் மூவர் அகதிகளாக தஞ்சம்

Tamilmirror Online || இலங்கையர் மூவர் அகதிகளாக தஞ்சம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin