• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானை சீண்டிய ட்ரம்பின் அதிரடி கருத்து: வெடித்த சர்ச்சை

GenevaTimes by GenevaTimes
June 27, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானை சீண்டிய ட்ரம்பின் அதிரடி கருத்து: வெடித்த சர்ச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானின் (Iran) உயர் அதிகாரி அயதுல்லா அலி கமேனி (Ali Khamenei), போர்நிறுத்தத்திற்கு பின்னர் தாம் வெற்றி பெற்றதாக அறிவித்ததற்கு அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.



இதனடிப்படையில், அலி கமேனியை நான் மிகவும் கேவலமான மற்றும் இழிவான மரணத்திலிருந்து காப்பாற்றினேன், அவர் அதற்கு நன்றி ஜனாதிபதி ட்ரம்ப் என தெரிவிக்க வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.



குறித்த விடயத்தை தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 தீய அணுசக்தி

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “போரினால் பாதிக்கப்பட்ட ஈரான் நாட்டின் உயர் தலைவர் என்று அழைக்கப்படும் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேலுடனான போரை வென்றதாக இவ்வளவு வெளிப்படையாகவும் முட்டாள்தனமாகவும் ஏன் தெரிவிக்கின்றார்.


அவரது கூற்று பொய் என்று அவருக்குத் தெரியும், மிகுந்த நம்பிக்கை கொண்ட மனிதராக, அவர் பொய் சொல்லக்கூடாது.

ஈரானை சீண்டிய ட்ரம்பின் அதிரடி கருத்து: வெடித்த சர்ச்சை | Trump Warns Ali Khamenei Again

அவரது நாடு அழிக்கப்பட்டது, அவரது மூன்று தீய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன, மேலும் அவர் எங்கு அடைக்கலம் பெற்றார் என்பது எனக்குத் தெரியும்.


உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த இஸ்ரேல் அல்லது அமெரிக்க ஆயுதப் படைகளை அவரது உயிரை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் அனுமதிக்கவில்லை.

பல ஈரானியர்கள்

நான் அவரை மிகவும் கேவலமான மற்றும் இழிவான மரணத்திலிருந்து காப்பாற்றினேன், அவர் அதற்கு நன்றி ஜனாதிபதி ட்ரம்ப் என தெரிவிக்க வேண்டியதில்லை.


உண்மையில், போரின் இறுதிச் செயலில், இஸ்ரேல் ஒரு பெரிய குழு விமானங்களை மீண்டும் ஈரானுக்கு அனுப்பிய போது அவற்றை திரும்ப வருமாறு நான் கோரினேன், அவை நேரடியாக தெஹ்ரானுக்குச் சென்று கொண்டிருந்தன.

ஈரானை சீண்டிய ட்ரம்பின் அதிரடி கருத்து: வெடித்த சர்ச்சை | Trump Warns Ali Khamenei Again

ஒருவேளை அது ஈரானின் முழுமையான அழிவாக இருந்திருக்கலாம், மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும், மேலும் பல ஈரானியர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்.


இதுவரை நடந்த போரின் மிகப்பெரிய தாக்குதலாக அது இருந்திருக்கும், கடந்த சில நாட்களாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது மற்றும் பிற விடயங்கள் குறித்து நான் ஆய்வு செய்து கொண்டிருந்தேன்.

அவை ஈரானுக்கு முழுமையான, விரைவான மற்றும் முழுமையான மீட்சியைப் பெறுவதற்கு மிகச் சிறந்த வாய்ப்பை அளிக்கும் அடிப்படையிலானவை.

பொருளாதாரத் தடைகள் 

ஈரானை பொருளாதாரத் தடைகள் மிகவும் பாதிக்கக் கூடியவை ஆனால் அவர்கள் எம் மீது கோபம் மற்றும் வெறுப்பு போன்றவற்றை பதிலாக தருவதால் அறிக்கையால் நான் பாதிக்கப்படுகிறேன்.



அதனால் உடனடியாக தடை நிறுத்துவதை கைவிட்டுவிட்டேன், ஈரான் உலக ஒழுங்கின் பாதையில் மீண்டும் இறங்க வேண்டும் இல்லையெனில் விளைவுகள் அவர்களுக்கு மிக மோசமாகி விடும்.

அவர்கள் எப்போதும் மிகவும் கோபமாகவும், விரோதமாகவும், மகிழ்ச்சியற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

அது அவர்களுக்கு என்ன கொடுத்தது என்பதைப் பாருங்கள் எரிந்து போன, வெடித்த நாடு, எதிர்காலம் இல்லாத, ஒரு சீரழிந்த இராணுவம், ஒரு பயங்கரமான பொருளாதாரம் மற்றும் அவர்களைச் சுற்றி மரணம்.


அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, அது இன்னும் மோசமாகிவிடும், வினிகரை விட தேன் மூலம் நீங்கள் அடிக்கடி நல்லவற்றை பெறுவீர்கள் என்பதை ஈரானின் தலைமை உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ஆப்பிரிக்காவில் சோகம்: டிரான்ஸ்பார்மர் வெடித்து 29 மாணவர்கள் பலி | Makkal Osai

Next Post

ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரிப்பு

Next Post
ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரிப்பு

ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin