Last Updated:
எம்ப்ளாயீ பிராவிடண்ட் ஃபண்ட் என்பது சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் கட்டாயமாக பிடித்தம் செய்யப்படும் ஒரு தொகை. நிபுணர்களைப் பொறுத்தவரை, இது நீண்ட கால சேமிப்புக்கு ஒரு அற்புதமான கருவி என்கின்றனர்.
பொருளாதார சுதந்திரம், முன்கூட்டிய பணி ஓய்வு பெறுவது போன்ற பல்வேறு கான்செப்ட்கள் பிரபலமடைந்து வரும் இந்த சூழ்நிலையில், நம்முடைய ஓய்வு கால சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது. மாத வருமானம் பெறும் பல நபர்களுக்கு எம்ப்ளாயீ பிராவிடண்ட் ஃபண்ட் (EPF) என்பது ஒரு வலிமையான பொருளாதார கருவியாக அமைகிறது.
EPF என்பது ஒவ்வொரு மாதமும் ஊழியரின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையாகும். இதே அளவு தொகையை நிறுவனமும் பங்களிக்கும். ஆனால், நிறுவனம் செய்யும் 12 சதவீத பங்களிப்பில் 8.33 சதவீதம் எம்ப்ளாயீ பென்ஷன் திட்டத்திற்கும், மீதம் இருக்கக்கூடிய 3.67% நேரடியாக EPF அக்கவுண்டிற்கும் டெபாசிட் செய்யப்படும். இதனை கூட்டு வட்டி முறையில் பன்மடங்காக அதிகரிப்பதற்கு அனுமதித்தால் மட்டுமே நாளடைவில் EPF மூலமாக அதிகபட்ச ரிட்டன்களை நம்மால் பெற முடியும்.
மாத வருமானம் பெறும் நபர்கள் வேலைக்குச் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று இடையில் பிரேக் எடுப்பது அல்லது ஒரு வேலையில் இருந்து மற்ற வேலைக்கு மாறும்போது தங்களுடைய EPF பங்களிப்பில் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். தொடர்ச்சியாக 36 மாதங்களுக்கு EPF பங்களிப்புகள் நிறுத்தப்பட்டால் கூட்டு வட்டி முறை மேற்கொண்டு பொருந்தாது என்பதை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, வேலை மாற்றத்தின்போது வழக்கமான வருமானத்தை தொடர்ந்து பராமரிக்க முயற்சி செய்து, EPF பணத்தை வித்டிரா செய்வதை ஒருவர் தவிர்க்க வேண்டும்.
PF பேலன்ஸை எப்படி சரிபார்ப்பது?
- உங்களுடைய PF பேலன்ஸை தெரிந்துகொள்ள EPF போர்ட்டலுக்கு சென்று, ‘இ-பாஸ்புக்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு உங்களுடைய UAN மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி லாகின் செய்யுங்கள்.
- கொடுக்கப்பட்டுள்ள கேப்சா கோடை என்டர் செய்துவிட்டு, ‘பாஸ்புக்’ என்பதை தேர்வு செய்யுங்கள்.
- இப்போது ‘மெம்பர் ID’-ஐ கிளிக் செய்து, உங்களுடைய பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம்.
June 27, 2025 5:37 PM IST
ஓய்வுகால சேமிப்பு அதிகமாக இருக்க வேண்டுமா…? இபிஎஃப் விஷயத்தில் இந்த தவறுகளை செய்யாதீங்க…!


