அவருடன் வாட்ஸ்ஆப், டெலிகிராம் செயலிகளிலும் உரையாடியுள்ளார். விகாஸுக்கு கிரிப்டோகரன்சி மூலம் பிரியா பணமும் அளித்தது விசாரணையில் தெரிய வந்தது.
2022 ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட உளவாளி ரவி பிரகாஷ் மீனா தொடர்பான வழக்கில் இருந்துதான், விகாஸ் வழக்கும் தொடங்கியது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் நான்காம் நிலை ஊழியராக இருந்த ரவி பிரகாஷ், பாகிஸ்தானுக்கு வரைபடங்கள் போன்ற முக்கிய தகவல்களை வழங்கியதற்கு ஈடாக, அவருக்கு கிரிப்டோகரன்சி சேனல் பணம் அளிக்கப்பட்டது.
அதே கிரிப்டோகரன்சி சேனலில் விகாஸும் இருப்பது அறிந்து, அவரும் 2 ஆண்டுகளாக கண்காணிப்பு வளையத்துக்கு உட்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, அவரை கைது செய்த புலனாய்வு அமைப்புகள், 4 நாள் காவல் அனுமதியையும் பெற்றுள்ளனர். விகாஸின் மொபைல் போன், தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு இந்திய கடற்படையின் முக்கிய ஆவணங்களை ஸ்கேன் செய்து, விகாஸ் அனுப்பியிருக்கலாம் என்றும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போதும் முக்கிய தகவல்களை வழங்கியிருக்கலாம் என்றும் புலனாய்வு அமைப்புகள் சந்தேகிக்கின்றன.

