சிங்கப்பூருக்கு சென்றால் மட்டும் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நினைப்பவர்கள் இப்போது சிங்கப்பூர் செல்லாமல் இருப்பது நல்லது.
தற்போது நிலவி வரும் சூழ்நிலைக்கு நிறைய காரணங்கள் உள்ளன. சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனும், அவசரத்தினாலும் சென்று நிறைய பேர் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
கரணங்கள் :
1. அதிகமாக முன்பணம் கட்டுவது. தெரியாதவர்களிடம் பணத்தை கொடுத்து விட்டு வேலைக்காக அதிக நாட்கள் காத்திருப்பது. குறிப்பாக ஒரு வருடம் அல்லது அதற்கு மேலாக காத்திருந்தும் சிங்கப்பூர் செல்ல முடியாமல் எப்போது வேலை கிடைக்கும் என்று காத்திருப்பது போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர்.
2. உங்களுக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்தாலும் அது என்ன வேலை என்பது தெரியாமல், அதைப் பற்றிய முழு விவரமும் அறியாமல் நீங்கள் சிங்கப்பூர் செல்வது மிகவும் வருத்தத்திற்குரியது. இத்தகைய சூழ்நிலைகளை பலர் எதிர்கொண்டும் ஏமாந்தும் போயுள்ளனர்.

