Last Updated:
டிரம்ப், ஈரானின் அணு சக்தி தளங்களை அமெரிக்கா முற்றிலும் அழிக்கவில்லை என்ற தகவல் பொய்யானது என கூறினார்.
ஈரானின் அணு சக்தி தளங்களை அமெரிக்கா முழுமையாக அழிக்கவில்லை என்று வெளியான தகவல், முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஈரான் இடையிலான சண்டையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்ட அமெரிக்கா, ஈரானில் உள்ள 3 அணு சக்தி தளங்களை பங்கர் பஸ்டர் குண்டுகளைப் போட்டு அழித்ததாக கூறப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
அதாவது, ஈரானின் அணு சக்தி தளங்களை அமெரிக்கா முற்றிலும் அழிக்கவில்லை என்றும், மிதமான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், புலனாய்வு அமைப்பு வெளியிட்டதாகக் கூறப்படும் அறிக்கை போலியானது என்று தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ராணுவத் தாக்குதல்களை இழிவுபடுத்தும் முயற்சி என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக மீண்டும் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
June 25, 2025 12:30 PM IST
“ஈரானின் அணு சக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டதா..?” அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் விளக்கம்!


