Last Updated:
தன்னுடைய தந்தையின் வழிகாட்டுதலின்கீழ் பணிபுரிந்துவந்த ஜெயந்தி சௌஹான், பிஸ்லரி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்திற்கு பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தியாவின் முன்னணி பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பிராண்டான பிஸ்லரி இன்டர்நேஷனல் நிறுவனத்தை நடத்திவரும் மிகவும் பிரபலமான ஒரு தொழிலதிபர் ஜெயந்தி சௌஹான். தன்னுடைய தந்தையான ரமேஷ் சௌஹான் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் வைஸ் சேர்பர்சனாக ஜெயந்தி சௌஹான் பணிபுரிந்து வருகிறார். தன்னுடைய 24 வயதில் இருந்தே இந்த நிறுவனத்தில் முக்கிய பங்காற்றி வருகிறார். 7000 கோடி மதிப்புடைய இந்த தொழிலின் ஒரே வாரிசு இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஸ்லரி நிறுவனத்தில் ஜெயந்தி சௌஹான்:
தன்னுடைய தந்தையின் வழிகாட்டுதலின்கீழ் பணிபுரிந்துவந்த ஜெயந்தி சௌஹான், பிஸ்லரி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்திற்கு பொறுப்பேற்றுக் கொண்டார். 45 வயதான இவர் தொழிற்சாலைகளை புதுப்பிக்கவும், பல்வேறு செயல்முறைகளை ஆட்டோமேட் செய்யவும் ஆர்வம் காட்டினார்.
இவருடைய தலைமையின்கீழ் 2024 நிதியாண்டில் பிஸ்லரி நிறுவனத்தின் லாபமானது 82.8% அதிகரித்து 316.95 கோடி ரூபாயாக மாறியது. மேலும், செயல்பாடுகள் மூலமாக கிடைத்த வருவாய் 14.8% உயர்ந்து 2689.69 கோடி ரூபாயாக அதிகரித்தது. இந்த நிறுவனம் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பிரிவில் Coca-Colaவின் Kinley மற்றும் PepsiCoவின் Aquafina உடன் போட்டியிடுகிறது.
2022ல் கைவிடப்பட்ட பிஸ்லரி டாடா டீல்:
2022இல் ரமேஷ் சௌஹான் தன்னுடைய தொழிலை விற்பனை செய்துவிடலாம் என்று முடிவு செய்தார். பலர் இந்த தொழில், டாடா குழுமத்திற்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் ஜெயந்தி தன்னுடைய இந்த தொழில் சாம்ராஜ்யத்தை விற்பனை செய்ய தயாராக இல்லை என்பதை தெரிவித்தார். எனவே, இந்த தொழிலை முழுமையாக தானே ஏற்று நடத்துவதற்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக ஜெயந்தி முடிவு செய்தார்.
ஜெயந்தி சௌஹானின் கல்வி:
ஜெயந்தி லாஸ் ஏஞ்சல்ஸில் அமைந்துள்ள ஃபேஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன் அண்ட் மெர்ச்சண்டைசிங்கில் புராடக்ட் டெவலப்மெண்ட் பிரிவை தேர்வு செய்து படித்தார். அதன் பிறகு மிலானோவில் உள்ள ஃபேஷன் ஸ்டைலிங்கில் பயின்றார். அது மட்டுமல்லாமல், லண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் மற்றும் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில் பட்டப்படிப்பை முடித்தார். மேலும், லண்டன் காலேஜ் ஆஃப் ஃபேஷன் ஸ்டைலிங் மற்றும் போட்டோகிராபி பிரிவில் தன்னுடைய படிப்பை முடித்தார்.
ஜெயந்திக்கு பிற பிரிவுகளில் இருந்த ஆர்வங்கள்:
ஜெயந்தி பயணங்கள் மேற்கொள்வதில் தீவிரமான ஆர்வம் கொண்டவர். மேலும், விலங்குகள் மீது அதிக அன்பு கொண்ட இவருக்கு போட்டோகிராபியிலும் ஆர்வம் உள்ளது. தனக்கு கிடைக்கும் அற்புதமான அனுபவங்கள், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் தான் எதிர்கொள்ளும் மக்களின் வித்தியாசமான கதைகளை படம் பிடிப்பது இவருக்கு பிடித்தமான விஷயம்.
June 24, 2025 8:54 PM IST
ரத்தன் டாடாவின் டீலை ரிஜக்ட் செய்த பெண் தொழிலதிபர்…! ரூ.7,000 கோடி நிறுவனத்தை வழிநடத்தி சாதனை…


