Last Updated:
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், யெஸ்யஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சதமடித்து, முதல் இன்னிங்ஸுக்கு 471 ரன்களை சேர்த்தனர்.
148 ஆண்டுகாலமாக உலக நாடுகள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை விளையாடி வருகின்றன. அதில் இந்திய அணி 93 ஆண்டுகாலமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை விளையாடி வருகிறது. இந்த வரலாற்றில், இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சதமடித்து, முதல் இன்னிங்ஸுக்கு 471 ரன்களை சேர்த்தனர். இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 465 ரன்களை எடுத்தது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸிற்கு களமிறங்கிய இந்திய அணியில், கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சதமடித்தனர். இதில் ரிஷப் பண்ட் 2 இன்னிங்ஸிலும் சதமடித்து, வரலாறு படைத்தார்.
இதன் மூலம் இந்திய அணி மொத்தமாக இந்த டெஸ்ட் போட்டியில் 5 சதங்கள் விளாசி சாதனை படைத்துள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 5 சதங்களை பதிவு செய்வது இதுவே முதல்முறை. இதற்கு முன்னர் இந்திய வீரர்கள் 4 சதங்களை விளாசியதே சாதனையாக இருந்தது. மேலும் இதுவரை 4 போட்டிகளில் இந்திய வீரர்கள் 4 சதங்களை பதிவு செய்துள்ளார்கள்.
அதுமட்டுமின்றி, டெஸ்ட் போட்டியில் இதுவரை 4 அணிகள் மட்டும் தான் 5 சதங்களை பதிவு செய்துள்ளன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் (2 முறை), ஆகிய நாடுகள் தான் இதுவரை 5 சதங்களை விளாசியுள்ளன. இந்த பட்டியலில் தற்போது இந்திய அணியும் இணைந்துள்ளது.
இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று, இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 350 ரன்கள் தேவைப்படுகிறது. அதுவே இந்தியா 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டிய நிலையில் உள்ளது.
June 24, 2025 1:41 PM IST


