ஒரு வாரக் காலத்திற்கும் மேலாக, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று அமெரிக்காவும் ஈரானின் அணு திட்டப் பகுதிகளைத் தாக்கியுள்ளது.
இந்தத் தாக்குதல்களுக்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியப் பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைப்பேசியில் பேசியிருக்கிறார்.
இது குறித்து மோடியின் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது…
“ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனிடம் பேசினேன். தற்போதுள்ள சூழலைப் பற்றி விரிவாக விவாதித்தோம். சமீபமாக மோதல்கள் அதிகரித்து வருவது குறித்து ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தேன்.

உடனடியாகப் பதற்றத்தைக் குறைப்பது, பேச்சுவார்த்தை நடத்துவது ஆகியவற்றை வலியுறுத்தினேன். மேலும், சீக்கிரம் அந்தப் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றை நிலைநாட்ட வலியுறுத்தினேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் தாக்குதலில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியுள்ளது. பிற உலக நாடுகளைப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

