ஆனால், அதிக உற்பத்தி இருந்தபோதிலும், மாங்கனிகளை கொள்முதல் செய்வதில் மாம்பழக் கூழ் ஆலை நிர்வாகங்கள் தயக்கம் காட்டின. மேலும், ஆந்திரா அரசு தமிழக மாங்கனிகளுக்கு தடை விதித்ததும் நிலைமையை மேலும் மோசமாக்கியது. இதன் விளைவாக, மாம்பழங்களுக்கான விற்பனை வெகுவாக சரிந்ததுடன், வரலாறு காணாத விலை வீழ்ச்சியும் ஏற்பட்டது. ஒரு கிலோ மாம்பழம் 3 ரூபாய்க்கும், தனியார் பழச்சாறு ஆலைகளால் 5 ரூபாய்க்கும் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.

