Last Updated:
சாதாரண விவசாயி 10 வேப்ப மரங்கள் வளர்த்தால் எந்த ஒரு செலவுகள் இல்லாமல் 25 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
வீணாக கிடக்கும் தரிசு நிலங்களிலும் லாபம் பார்க்கலாம் என புதுக்கோட்டையை சேர்ந்த விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பயனுள்ள நேர்த்தியான டிப்ஸ் குறித்து பார்க்கலாம்.
வேப்பமரம் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு முக்கியமான மூலிகை பயன்கள் நிறைந்த மரமாகும். வேப்ப மரத்தின் இலை, விதை, பூ, பட்டை, மரத் துண்டு என அனைத்தும் நமக்கு பல நன்மைகள் மற்றும் பயன்களை அளிக்கின்றன. மருத்துவ ரீதியாக மட்டும் அல்லாமல் பொருளாதார ரீதியிலும் வேப்பமரம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது வேப்ப மரத்திலிருந்து கிடைக்கும் லாபங்கள் பற்றிய தகவல்களை புதுக்கோட்டை மாவட்ட விவசாயி தணபதி நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.
நினைத்த இடமெல்லாம் வளரும் ஆங்காங்கே வளர்ந்து இருப்பதால் அதன் முக்கியத்துவம் தெரியாமல் இருக்கின்றோம் ஆனால் அதில் இருந்து கிடைக்கும் லாபங்கள் ஏராளம் என பேச ஆரம்பித்தார் விவசாயி.
வேப்ப மரம் இலை, பூ, காய், பழம், மரத் துண்டு நிலைகள் ஜன்னல் செய்ய என பல்வேறு பயன்கள் நிறைந்த மரம். அதாவது ஒரு 10 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் என்றால் கிட்டத்தட்ட நூறு கிலோ அளவிற்கு வேப்பம் காய்கள் காய்க்கும் அது பழுத்து காய வைத்து எடுத்தால் 25 கிலோ வரையும் வேப்ப விதைகள் கிடைக்கும். இப்போது 1 கிலோ வேப்பம் விதை 100 ரூபாய் வரை எடுக்கப்படுகிறது. ஒரு மரத்திற்கு 2500 ரூபாய் வரை கிடைக்கும் என தெரிவித்து நம்மை அசர வைத்துள்ளார்.
வேப்ப மரம் விவசாயம் பண்றது அவ்வளவு சுலபமான ஒன்று. வளரும் காலம் சற்று அதிகமாக இருக்கும். ஆனால் வளர்ந்த பிறகு அதற்கு ஏற்ற லாபம் பெற முடியும். இது விவசாயிகளுக்கு மிகவும் எளிமையாக வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும். வேப்ப மரங்கள் 100 வருடங்களுக்கு மேலாக கூட இருக்கும். குறைந்த பட்சம் 30 வருஷம் ஆன வேப்ப மரம் பல்வேறு நிலைகளில் பல்வேறு வேலைகளுக்கு பயன்படுகிறது.
அதாவது விவசாய நிலங்களின் வரப்புகள், அதுபோக வீணாக இருக்கும் தரிசு நிலங்களில் இதனை நட்டு லாபம் பார்க்கலாம். ஒரு சாதாரண விவசாயி 10 வேப்ப மரங்கள் வளர்த்தால் எந்த ஒரு செலவுகள் இல்லாமல் 25 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். இது போல விவசாயிகள் முடிந்த வரை தங்கள் தரிசு நிலங்களை அப்படியே போட்டுவிடாமல் 20 முதல் 30 வேப்ப மரங்கள் வளர்த்தால் போதும். உரச் செலவு, தண்ணீர், பராமரிப்பு என எதுவும் இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய் வரை லாபம் பெற முடியும் என விவசாயி தணபதி தெரிவித்துள்ளார். தரிசு நிலங்களிலும் பயிர் வைத்து லாபம் பார்க்கலாம் என விவசாய தணபதி கூறியது மற்ற விவசாயிகளிடையே நம்பிக்கையும், ஆச்சரியத்தையும் அளித்தது என்று தான் சொல்ல வேண்டும்.
June 19, 2025 5:18 PM IST
ரூ. 50,000 லாபம் – தரிசு நிலங்களையும் செழிக்க வைக்கும் வேப்ப மரம்!! விவசாயி சொன்ன பவர்புல் டிப்ஸ்…

