Last Updated:
ஏப்ரல் 22ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா கடுமையான பாடம் கற்பித்தது. இந்திய ராணுவம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படையினரின் கடுமையான ஷெல் தாக்குதலுக்கு மத்தியில், தனது சக ஊழியர்களைப் பாதுகாக்கும்போது காயமடைந்த BSF வீரரின் துணிச்சலுக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த சக பயணிகள் பாராட்டினர்.
விமானத்தில் ராணுவ வீரர் இருப்பதாக அறிவிக்கப்பட்டவுடன், பயணிகள் எழுந்து நின்று அவரைப் பாராட்டினர். இதன் வீடியோவையும் BSF பகிர்ந்துள்ளது. மே 7 மற்றும் மே 8 ஆகிய தேதிகளில் பாகிஸ்தானின் கடுமையான துப்பாக்கிச் சூட்டில் இருந்து சக வீரர்களை உதவி துணை ஆய்வாளர் ராஜபக்ஷ் B T காப்பாற்றினார்.
ஏப்ரல் 22ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா கடுமையான பாடம் கற்பித்தது. இந்திய ராணுவம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
பின்னர், பாகிஸ்தான் இந்தியா மீது ட்ரோன் தாக்குதல்களை நடத்த முயன்றது. ஆனால், இந்திய ராணுவம் அனைத்து தாக்குதல்களையும் முறியடித்து 11 பாகிஸ்தான் ராணுவ தளங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில், எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் துப்பாக்கிச் சூட்டுக்கு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
BSFஇன் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், இந்த இண்டிகோ விமானத்தின் கேப்டன், ராஜபக்ஷேவை மற்ற பயணிகளுக்கு “விமானத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த பயணி” என்று அறிமுகப்படுத்துவதைக் காணலாம். மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது, ஜம்மு பிராந்தியத்தில் உள்ள சர்வதேச எல்லையில் கடுமையான ஷெல் தாக்குதலுக்கு மத்தியில், எல்லை பாதுகாப்புப் படையின் 165வது பட்டாலியனைச் சேர்ந்த உதவி துணை ஆய்வாளர் ராஜபக்ஷ் B T தனது சக ஊழியர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தபோது படுகாயமடைந்தார்.
அவரது துணிச்சலான மற்றும் தன்னலமற்ற பணிக்காக அவரைப் போற்றுவோம் என்று அவர் மேலும் கூறினார். இந்த அறிவிப்புக்குப் பிறகு, விமானத்தில் இருந்தவர்கள் BSF வீரர் ராஜபக்ஷ் B T-க்கு மரியாதை செலுத்தும் விதமாக கைதட்டினர். இதற்கிடையில், வீரர் ராஜபக்ஷ் B T கூப்பிய கைகளுடன் மக்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
“कुछ वीर जन्म से नहीं, कर्म से महान बनते हैं”
दिनांक 10 जून 2025, इंडिगो दिल्ली-बेंगलुरु के विमान कर्मी दल द्वारा बीएसएफ की 165 बटालियन के सहायक उप निरीक्षक राजप्पा बी.डी. द्वारा ऑपरेशन सिन्दूर में किये गए वीरोचित कार्य का पुनः स्मरण, उनकी कर्तव्यनिष्ठा और देश के लिए समर्पण का… pic.twitter.com/CBASsQLpd7— BSF (@BSF_India) June 11, 2025
இந்த மரியாதை ராஜபக்ஷ் B T போன்ற ஒரு துணிச்சலான வீரரை பெருமைப்படுத்துவது மட்டுமல்லாமல், நமது பாதுகாப்பிற்காக வீரர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள் என்பதை முழு தேசத்திற்கும் நினைவூட்டியது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் என்பது நமது மக்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இந்தியாவின் சமூக ஒற்றுமையின் மீதான தாக்குதல் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் தெரிவித்தார். இந்திய வரலாற்றில் பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட “மிகப்பெரிய நடவடிக்கை” ஆபரேஷன் சிந்தூர் என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
June 17, 2025 9:59 PM IST
எல்லையில் துணிச்சலை வெளிப்படுத்திய ராணுவ வீரருக்கு இன்டிகோ விமானத்தில் மரியாதை: வைரல் வீடியோ…!


