Last Updated:
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் BJ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்யன் ராஜ்புத், மானவ் பாது, ஜெயபிரகாஷ் சவுத்ரி மற்றும் ராகேஷ் தியோரா உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியருக்கு அருகிலுள்ள ஜிக்சாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்யன் ராஜ்புத். இவர் நீட் தேர்வில் 695 மதிப்பெண்கள் பெற்று BJ மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். இவர் முதலாமாண்டு படித்து வருகிறார். மற்றொரு மாணவர் மானவ் பாது, அவர் ராஜஸ்தானின் ஹனுமன்கரைச் சேர்ந்தவர். இவரும் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மூன்றாவது மாணவர் ஜெயபிரகாஷ் சவுத்ரி, அவர் ராஜஸ்தானின் போரிச்சரன் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர்கள் மூவரும் சிறந்த நண்பர்களாவார்கள். எங்கோ பிறந்த அவர்கள், BJ மருத்துவக் கல்லூரியில் நண்பர்களானார்கள். ஆர்யன் ராஜ்புத்தும், மானவும் நன்றாக படித்து வந்தவர்கள். ஜெயப்பிரகாஷ் சௌத்ரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாலும், அவர்களுடன் நல்ல நட்பை வளர்த்துக் கொண்டார். இதனையடுத்து, அவர்கள் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு ஒன்றாகச் சென்று, ஒன்றாகச் சாப்பிடுவார்கள்.
விமான விபத்து நடந்த அன்று காலையில் அவர்கள் மூவரும் ஒன்றாக காலை உணவை சாப்பிட்டனர். மதியம் 1:20 மணிக்கு மதிய உணவிற்காக விடுதி கட்டிடத்திற்கு வந்தனர். அவர்கள் மூவரும் ஒரே இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் இருந்தனர். அப்போது, ஏர் இந்தியா விமானம் 171 BJ மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் இந்த மூன்று மாணவர்களும் உயிரிழந்தனர். மேலும் இதில் சில மாணவர்கள் சிக்கிக்கொண்டனர், மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவமானது கல்லூரியின் ஒட்டுமொத்த மாணவர்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது.
இவர்களுடன், பாவ்நகரில் உள்ள தியோரா கிராமத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவரான ராகேஷ் தியோரா, மூன்று நண்பர்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு அடுத்த டேபிளில் அமர்ந்திருந்தார், இவரும் இந்த விபத்தில் உயிரிழந்தார். ராகேஷ் தியோரா கடந்த புதன்கிழமை வரை அகமதாபாத்தில் உள்ள தனது இல்லத்தில் தன்னுடன் இருந்ததாக அவரது மைத்துனர் அல்பேஷ் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும் அவர், அவர் எங்களுடன் இருந்தபோது, எந்த புத்தகத்தையும் கொண்டு வரவில்லை. அவரது புத்தகங்கள் விடுதியில் இருந்ததாலும், ஜூன் 16 ஆம் தேதி தேர்வுகள் தொடங்க இருந்ததாலும், கடந்த புதன்கிழமை அன்று அவர் என் வீட்டை விட்டு வெளியேறினார். விமான விபத்து பற்றி அறிந்தவுடன், நான் அவருக்கு கால் செய்தேன், ஆனால் எனது கால்களுக்கு பதிலளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
June 17, 2025 4:09 PM IST
அகமதாபாத் விமான விபத்து : எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த 3 நண்பர்கள் ஒரே நேரத்தில் உயிரிழப்பு! – சோக சம்பவம்


