கடந்த 2016-ஆம் ஆண்டு, வருமான வரித் துறை சோதனையைத் தொடா்ந்து சஞ்சய் பந்தாரி லண்டன் தப்பினாா். அதற்கு முன்பு 2009-ஆம் ஆண்டில், ராபா்ட் வதேராவின் அறிவுறுத்தலில், அவா் வழங்கிய நிதியில் லண்டனில் ஒரு சொகுசு பங்களாவை வாங்கி, சஞ்சய் பந்தாரி புணரமைத்ததாக அமலாக்கத் துறை கடந்த 2023-ஆம் ஆண்டு தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையில் குற்றஞ்சாட்டியது.

