• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கும் சேமிப்புத் திட்டம்… அவசியம் தெரிஞ்சுக்கோங்க…!

GenevaTimes by GenevaTimes
June 14, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கும் சேமிப்புத் திட்டம்… அவசியம் தெரிஞ்சுக்கோங்க…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது இந்தியாவில் நீண்டகால சேமிப்புக்கான மிகவும் நம்பகமான மற்றும் வரிச் சலுகைகள் கொண்ட முதலீட்டு விருப்பத்தை வழங்குகிறது. அந்த வகையில், பொது வருங்கால வைப்பு நிதி முதலீட்டாளர்களுக்கு ஆபத்து இல்லாத கவர்ச்சிகரமான தேர்வாக இருந்து வருகிறது. மத்திய அரசால் ஆதரிக்கப்படும் இந்தத் திட்டம், 15 ஆண்டு கால லாக்-இன் காலத்துடன் வருவதால், சீரான பங்களிப்புகள் மூலமாக சேமிப்பை உருவாக்குவதற்கு ஏற்றதாக உள்ளது.

இந்தத் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், முதலீட்டுத் தொகை, ஈட்டப்படும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகை என அனைத்துக்கும் வரிவிலக்கு உண்டு. இதனாலேயே, ஓய்வூதியத்திற்கான சிறந்த சேமிப்பு தேர்வாக இது பலராலும் விரும்பப்படுகிறது.

முதலீட்டு வரம்புகள் மற்றும் விரிவாக்கம்

ஒரு பிபிஎஃப் கணக்கில் வருடத்திற்கு குறைந்தது 500 ரூபாய் வரை முதலீடு செய்யலாம் மற்றும் அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையாகவோ அல்லது ஒரே சமயத்தில் முழுத் தொகையாகவோ முதலீடு செய்யலாம். முதல் 15 ஆண்டுகள் முடிவடையும்போது, மேலும் 5 ஆண்டுகளை நீட்டிக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்குகிறது. இதன் மூலம், கூடுதல் வருமானத்தை ஈட்ட உதவும் சிறந்த மற்றும் நெகிழ்வான நீண்ட கால தேர்வாக இது இருந்து வருகிறது.

தற்போதைய வட்டி விகிதம்

சிறு சேமிப்பு திட்டங்களின் கீழ்வரும் பிபிஎஃப்-ல், வட்டி விகிதங்கள் காலாண்டுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்படுகிறது. 2025 ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கு தற்போதைய பிபிஎஃப் வட்டி விகிதம் 7.1% ஆக உள்ளது. இது ஆண்டுக்கு நான்கு முறை அரசாங்கத்தால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. பிபிஎஃப் கணக்கை ஒருவர் அனைத்து முக்கிய வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் திறக்க முடியும். மேலும், கணக்கை செயல்படுத்த ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ரூ.500 கட்டாயம் செலுத்த வேண்டும்.

வரி விலக்கு

பிபிஎஃப் விலக்கு-விலக்கு-விலக்கு (EEE) வரி முறையைப் பின்பற்றுகிறது. அதாவது, இந்தியாவில் இருக்கும் முற்றிலும் வரி இல்லாத சில முதலீட்டு விருப்பங்களில் பிபிஎஃப் திட்டமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி,

  • முதலீடு செய்யப்பட்ட அசல் தொகைக்கு வரி கிடையாது.
  • பெறப்படும் வட்டிக்கும் வரி கிடையாது.
  • முதிர்வுத் தொகை அல்லது பணம் எடுப்பதற்கும் எந்த வரியும் இல்லை.

பிபிஎஃப்-ல் வட்டி எப்போது கணக்கிடப்படுகிறது?

பிபிஎஃப்-ல் வட்டி என்பது, ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி முதல் மாதத்தின் இறுதி தேதி வரை கணக்கில் இருக்கும் குறைந்தபட்ச இருப்பு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. எனவே, உங்கள் முதலீட்டை சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம் கூடுதலாக வட்டியைப் பெற முடியும்.

திட்டத்தில் சேர்வதற்கான தகுதி

  • 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் பிபிஎஃப் கணக்கைத் திறக்கலாம்.
  • மைனர் அல்லது மனநிலை சரியில்லாதவர்களுக்கு அவர்களது பாதுகாவலர்கள் பிபிஎஃப் கணக்கைத் திறக்கலாம்.

அதிக வட்டி வருமானம் பெற சிறந்த நடைமுறை

மாதாந்திர பங்களிப்பு செய்பவர்கள்: ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்கு முன்பாக பணம் செலுத்துவது சிறந்தது.

மொத்த தொகை முதலீட்டாளர்கள்: மொத்தமாக முதலீடு செய்பவர்கள், ஒரு நிதியாண்டின் ஏப்ரல் 1 முதல் 5-ஆம் தேதிக்குள் ரூ.1.5 லட்சம் செலுத்துவது மிகச் சிறந்தது. இது ஆண்டு முழுவதும் அதிக வட்டியைப் பெற உதவுகிறது.

பிபிஎஃப் திட்டம் நீண்ட கால சேமிப்பு, வரி விலக்கு கொண்டிருப்பதால் இது ஒரு சிறந்த தேர்வாகும். ஆனால், சரியான நேரத்தில் முதலீடு செய்வதன் மூலமே அதன் முழு பலனையும் பெற முடியும். எனவே, மாதாந்திர முதலீடாக இருந்தாலும், ஒருமுறை செய்யப்படும் முதலீடாக இருந்தாலும், மாதத்தின் 5-ம் தேதிக்கு முன்னதாகவே அதைச் செய்ய வேண்டும் என்பது முக்கியம்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

June 14, 2025 7:58 PM IST

Read More

Previous Post

“இனி பவுண்டரி லைனில் நின்று கேட்ச் பிடித்தால்…” – அக்டோபர் முதல் அமலுக்கு வரும் புதிய விதி என்ன?

Next Post

ஜூன் 19 இல் விண்வெளிக்கு செல்கிறார் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா…

Next Post
ஜூன் 19 இல் விண்வெளிக்கு செல்கிறார் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா…

ஜூன் 19 இல் விண்வெளிக்கு செல்கிறார் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin