Last Updated:
242 பேருடன் கிளம்பிய விமானம், விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்ததில் 241 பேர் உயிரிழந்தனர்.
விமானம் விழுந்த விடுதியில் இருந்த மாணவர்களின் உயிரிழப்பு குறித்து தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று பகல் 1.19 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 33வது விநாடியில் விழுந்து நொறுங்கியது. 242 பேருடன் கிளம்பிய விமானம், விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்ததில் 241 பேர் உயிரிழந்தனர். அகமதாபாத் விமான நிலையத்தில் 23வது ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டு மேலெழும்ப முடியாமல் தாழ்வாக பறந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரைத் தவிர வேறு யாரும் உயிர் பிழைக்கவில்லை.
இந்த விமானத்தில் 169 இந்தியர்கள், பிரிட்டனைச் சேர்ந்த 53 பேர், கனடாவைச் சேர்ந்த ஒருவர், போர்ச்சுகீசியத்தைச் சேர்ந்த 7 பேர், 2 விமானிகள், 10 பணியாளர்கள் உள்ளிட்ட 242 பேர் பயணித்தனர். இந்த விமான விபத்தில் சிக்கி குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார். இந்த சம்பவம் உலகையே உலுக்கியது.
இந்நிலையில், விமானம் விழுந்த விடுதியில் இருந்த 10 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து தீப்பற்றியதால் விடுதியில் இருந்த முதுநிலை மருத்துவ மாணவர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விடுதியில் இருந்த மருத்துவ மாணவர்களின் உறவினர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என மருத்துவ மாணவர் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
Ahmedabad,Gujarat
June 13, 2025 6:24 PM IST
அகமதாபாத் விமான விபத்து.. மருத்துவக் கல்லூரி விடுதியில் எத்தனை மாணவர்கள் உயிரிழப்பு..? வெளியான ஷாக் தகவல்!


