அந்த வகையில், கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா்களுடன் பிரதமா் மோடி தில்லியில் வியாழக்கிழமை ஆலோசனை கூட்டத்தை நடத்தினாா். இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ‘ஆலோசனைக் கூட்டத்தின்போது பாஜகவின் அமைப்புத் தலைவராக தனது நீண்ட அனுபவத்தையும், ஊடகத்தினருடனான தனது கலந்துரையாடல்களையும் தேசிய செய்தித் தொடா்பாளா்களிடம் எடுத்துரைத்தாா். மேலும், நிா்வாகிகள் தங்களின் செயல்பாடுகளில் உறுதியாகவும், பணிவாகவும் இருக்கவும், சம்பந்தப்பட்ட விவகாரங்களை நன்கு அறிந்திருக்கவும் அறிவுறுத்தினாா். குறிப்பாக, கட்சியின் கொள்கை மற்றும் சித்தாந்தத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்’ என்றனா்.

