Last Updated:
லண்டன் செல்ல இருந்த போது அகமதாபாத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் அவர் விமானத்தை தவற விட்டுள்ளார்.
அகமதாபாத் விமான விபத்து சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக விமானத்தை பெண் ஒருவர் தவற விட்டுள்ளார். இது குறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 12 பணியாளர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 10 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அகமதாபாத்தில் இருந்து விமானம் லண்டனுக்கு மதியம் 1.39 விமானம் புறப்பட்ட நிலையில், 10 நிமிடங்களில் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்ததால் தீ பற்றிக் கரும்புகை வெளியானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. விபத்தில் இதுவரை 204 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் பூமி சௌஹான் என்ற பெண் போக்குவரத்து நெரிசல் காரணமாக 10 நிமிடம் தாமதமாக வந்ததால் விமானத்தை தவறவிட்டார். அவர் செல்ல இருந்த விமானம்தான் பெரும் விபத்தில் சிக்கியது.
விமானத்தை தவறவிட்ட ஏமாற்றத்தில் இருந்த பூமி சவுகானுக்கு விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவர் லண்டன் செல்வதாக இருந்தது. அங்கு அவர் கணவர் வசித்து வருகிறார். விடுமுறையை கழிப்பதற்காக பூமி சவ்கான் இந்தியா வந்திருக்கிறார்.
இந்நிலையில் லண்டன் செல்ல இருந்த போது அகமதாபாத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் அவர் விமானத்தை தவற விட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அவர், நான் முற்றிலுமாக உருக்குலைந்து போனேன். என்னால் பேசக்கூட முடியவில்லை. விபத்தை எண்ணி பார்த்து எனக்கு நடுக்கம் ஏற்பட்டது. என் உயிரை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். நான் வணங்கும் கணபதி என்னை காப்பாற்றியுள்ளார் என்று தெரிவித்தார்.
June 12, 2025 9:27 PM IST
அகமதாபாத் விமான விபத்து.. டிராஃபிக்கால் விமானத்தை தவறவிட்ட பெண்.. அசம்பாவிதத்தை தவிர்த்தது எப்படி?


