• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || பிளான் பீயை பகிர்ந்தால் சோனம்

GenevaTimes by GenevaTimes
June 12, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || பிளான் பீயை பகிர்ந்தால் சோனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




 


இந்தூர்: மேகாலயாவில் தேனிலவு சென்ற போது கணவர் ராஜா கொல்லப்பட்ட விவகாரத்தில் கூலிப்படையினரிடம் இருந்து கணவர் தப்பினால் பிளான் பீ-யாக தான் வைத்திருந்த திட்டம் குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.


 


இந்தூர் தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் ஒரு முக்கிய ட்விஸ்ட்டாக சோனம்தான் கொலை செய்தார் என்பதை பொலிஸ் விசாரணையில் ஒப்புக் கொண்டார். ஆசை ஆசையாக தேனிலவுக்கு சென்றார் ராஜா, எத்தனை கனவுகள் கண்டிருந்தாரோ தெரியவில்லை.


 


ஆனால் அவருடைய மனைவியே அவருக்கு எமனாக மாறுவார் என்பதை ராஜா சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார். விருப்பமில்லாத திருமணத்தை ஏற்க மனமில்லாமல் சோனம், தனது காதலனை வைத்தே கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


சோனம்


இது தொடர்பாக சோனம் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்திலிருந்தே தனது கணவரை யாரோ மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தன்னை எங்கேயோ கடத்தி சென்றதாகவே தெரிவித்து வந்தார். ஆனால் ஒரு வழியாக தனது கணவர் ராஜாவை கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.


காதலன்


இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், சோனம், தனது காதலன் ராஜ் குஷ்வாகாவுக்கு ரூ 50 ஆயிரம் கொடுத்து விஷால் சிங், ஆனந்த் குர்மி மற்றும் ஆகாஷ் ராஜ்புத் ஆகிய 3 பேருக்கும் ஷில்லாங்கிற்கு பயண ஏற்பாடு செய்தார்.


 


தேனிலவு பயணம்


மேலும் தேனிலவு பயணத்தின் போது தன்னையும் ராஜாவின் நடமாட்டத்தையும் கண்காணிக்கும்படி அவர்களிடம் கேட்டுக் கொண்டாராம். ராஜாவுடன் திருமணம் முடிந்தும் காதலனுடன் சோனம் தொடர்பில் இருந்துள்ளார்.


உணவகம்


மே 16ஆம் திகதி இந்தூரில் உள்ள ஓர் உணவகத்தில் ராஜ் தனது உறவினர் விஷால் சவுகான், அவரது நண்பர்கள் ஆகாஷ் ராஜ்புத், ஆனந்த் குர்மி ஆகியோருடன் கொலைத் திட்டம் குறித்து விவாதித்ததாக இந்தூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


ரூ 50 ஆயிரம்


சவுகான், ராஜ்புத் மற்றும் குர்மி ஆகியோர் மே 17 அன்று ராஜ் ரூ 50 ஆயிரத்தை வழங்கிய பின்னர் மொபைல் போனுடன் மேகாலயாவுக்குச் சென்றனர். அதே நேரத்தில் ராஜ் குஷ்வாகா இந்தூரில் தங்கி சோனமின் சகோதரரின் தொழிற்சாலையில் தொடர்ந்து பணியாற்றினார்.


 


3 பேர்


குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் மே 17 ஆம் திகதி 18 ஆம் தேதி வரை இந்தூரிலிருந்து டெல்லிக்கு ரயிலில் சென்று பின்னர் கவுஹாத்திக்கு ராஜதானி எக்ஸ்பிரஸில் ஏறினார்கள். ராஜாவும் சோனமும் மே 20ஆம் தேதி அன்று இந்தூரிலிருந்து ஷில்லாங்கிற்கு விமானத்தில் சென்றார்களாம்.


லொகேஷன்


பயணத்தின் போதும் ராஜுடன் சோனம் தொடர்பில் இருந்தாராம். இதன் மூலம் தனது லொகேஷனை அவருக்கு சோனம் ஷேர் செய்தார். இதை வைத்துத்தான் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தேனிலவு சென்ற தம்பதியை தொடர்ந்து ஃபாலோ செய்தனராம்.


மலையேற்றம்


குற்றம்சாட்டப்பட்ட அந்த 3 பேரும் மே 23 ஆம் திகதி சுற்றுலா பயணிகள் போல் ராஜா, சோனத்துடன் மலையேற்றம் சென்றனர். அவர்கள் சுற்றுலா பயணிகள் அதிகம் இருக்கும் டபுள் டெக்கர் லிவிங் ரூட் பாலத்திலிருந்து விலகி, மிகவும் கரடுமுரடான பாதையைத் தேர்ந்தெடுத்து சென்றனர்.


அவரை கொல்லுங்கள்


ராஜா மே 23 அல்லது 24 ஆம் திகதி கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கிறார்கள். மலையேற்றத்தின் போது சோனம் வேண்டுமென்றே பின்தங்கி வந்தாராம். “அவரைக் கொல்லுங்கள்” கூச்சலிட்டு சிக்னல் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.


3 பேரில் ஒருவர்


அப்போதுதான் அந்த 3 பேரில் ஒருவர் ராஜாவை கூர்மையான ஆயுதங்களால் தாக்கினாராம். இதையடுத்து மற்ற இருவரும் தலை, உடற்பகுதியில் தாக்கினார்களாம். பின்னர் ராஜாவின் உடலை இழுத்துக் கொண்டு ஒரு பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டனர். பின்னர் கொலைக்கான ஆதாரங்களை அப்புறப்படுத்த சோனம் உதவி செய்துள்ளார். பின்னர் அனைவரும் தப்பி மத்திய பிரதேசம் சென்றுவிட்டனர்.


கூலிப்படை


ஒரு வேளை கூலிப்படையினரால் கொல்ல முடியாவிட்டால் பிளான் பியை சோனம் வைத்திருந்தாராம். அதன்படி ராஜாவை அங்கிருக்கும் மலை உச்சியில் இருந்து தள்ளிவிட திட்டமிட்டிருந்தாராம். இவ்வாறு பொலிஸார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

“இன்னும் ட்ரம்பை நம்புகிறதா இந்தியா…" – ஊடகவியலாளரின் கேள்விக்கு அமைச்சர் ஜெய்சங்கரின் பதில்!

Next Post

கர்நாடகாவில் தொடரும் கனமழை: இரண்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | Heavy rains continue in Karnataka Holidays for schools colleges

Next Post
கர்நாடகாவில் தொடரும் கனமழை: இரண்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | Heavy rains continue in Karnataka Holidays for schools colleges

கர்நாடகாவில் தொடரும் கனமழை: இரண்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | Heavy rains continue in Karnataka Holidays for schools colleges

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin