பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்த நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விவரிக்கும் வகையிலும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையிலும் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களை உள்ளடக்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது. இந்த குழுக்கள் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கி, இந்தியாவின் நடவடிக்கைக்கு உலக நாடுகளின் ஆதரவையும் பெற்றன. அந்தக் குழுக்களை பிரதமா் மோடி தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.

