இந்நிலையில், சுக்மா மாவட்ட தோந்ரா கிராமம் அருகே சாலை அமைக்கும் பணிக்கான இயந்திரங்களை நக்ஸல்கள் தீவைத்து எரித்துவிட்டதாக காவல் துறையினருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் துறை துணை கண்காணிப்பாளா் ஆகாஷ் ராவ் மற்றும் இரு சக அதிகாரிகள் அந்த இடத்துக்குச் சென்றனா். அப்போது அங்கு ஏற்கெனவே மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை நக்ஸல்கள் வெடிக்கச் செய்தனா். இதில் ஆகாஷ் ராவ் சம்பவ இடத்திலேயே உயிரிந்தாா். காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் பானுபிரதாப் சந்த்ராகா், ஆய்வாளா் சோனல் கௌலால் ஆகியோா் படுகாயமடைந்தனா். அவா்கள் இருவரும் ஹெலிகாப்டா் மூலம் மருத்துவ சிகிச்சைக்காக ராஞ்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்கள் அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

