• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கை 27%-ல் இருந்து 5.3% ஆக குறைந்தது: உலக வங்கி அறிக்கையில் தகவல் | Extreme poverty in India sees sharp decline

GenevaTimes by GenevaTimes
June 8, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
இந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கை 27%-ல் இருந்து 5.3% ஆக குறைந்தது: உலக வங்கி அறிக்கையில் தகவல் | Extreme poverty in India sees sharp decline
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவில் 11 ஆண்டில் பரம ஏழைகள் எண்ணிக்கை 27% – லிருந்து 5.3% ஆக குறைந்துள்ளதாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஏழ்மை நிலை தொடர்பாக உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2011-12 நிதியாண்டில் இந்தியாவில் பரம ஏழைகள் எண்ணிக்கை 34.44 கோடியாக இருந்தது. இது 2022-23 நிதியாண்டில் 7.52 கோடியாகக் குறைந்துள்ளது. 11 ஆண்டில் 26.9 கோடி பேர் பரம ஏழைகள் என்ற நிலையில் இருந்து மீண்டுள்ளனர். அதாவது 11 ஆண்டுகளுக்கு முன்பு 27.1 சதவீதமாக இருந்த பரம ஏழைகளின் விகிதம் இப்போது 5.3% ஆக குறைந்துள்ளது.

கடந்த 2011-12-ல் நாட்டின் ஒட்டுமொத்த ஏழைகளில் 65 சதவீதம் பேர் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பிஹார், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 2022-23-ல் ஏழைகள் எண்ணிக்கை குறைந்ததற்கு (3-ல் 2 பங்கு) இந்த மாநிலங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன.

தினசரி 2.15 டாலருக்கும் குறைவாக செலவிடுவோர் பரம ஏழைகள் என உலக வங்கி வரம்பு நிர்ணயித்திருந்தது. இது 2021-ல் 3 டாலராக உயர்த்தப்பட்டது. ஆனாலும், இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 5.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.

அதேநேரம், உலக அளவில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு 71.3 கோடியாக இருந்த பரம ஏழைகள் எண்ணிக்கை இப்போது 83.8 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இந்த எண்ணிக்கை 9-லிருந்து 10.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் நரேந்திர மோடி பிரதமரான பிறகு, அனைவருக்கும் வீடு, ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்கு, ஆயுஷ்மான் பாரத் காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதனால் வறுமை நிலை குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.



Read More

Previous Post

தொகுதி மறுவரையறை: ’இல்லாத பூதத்தை உருவாக்க மு.க.ஸ்டாலின் முயற்சி!’ விளாசும் எல்.முருகன்!

Next Post

அதிபர் டொனால்ட் டிரம்ப் – எலான் மஸ்க் மோதல்..! இடையில் பாதிக்கப்படும் நாசா – எப்படி தெரியுமா?

Next Post
அதிபர் டொனால்ட் டிரம்ப் – எலான் மஸ்க் மோதல்..! இடையில் பாதிக்கப்படும் நாசா – எப்படி தெரியுமா?

அதிபர் டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க் மோதல்..! இடையில் பாதிக்கப்படும் நாசா - எப்படி தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin