Last Updated:
நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரைப் பார்த்து அவரது சொந்த மகன் இஷான் தரூர் கேள்வி எழுப்பியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான குழு அமெரிக்காவுக்குச் சென்று அதிகாரிகளிடம் விளக்கமளித்தது. அதனைத் தொடர்ந்து நியூயார்க்கில் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது.
அப்போது, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிருபராகப் பணியாற்றும் சசி தரூரின் மகன் இஷான் தரூர் (Ishaan Tharoor), கேள்வி கேட்க எழுந்தார். அப்போது, அங்கு தனது மகனைக் கண்ட சசி தரூர் புன்னகைத்தபடியே, “அவர் தன்னுடைய மகன்” என்று அறிமுகம் செய்தார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரங்களை மற்ற நாடுகள் கேட்டார்களா? என இஷான் தரூர் வினவினார். நல்ல கேள்வி எனப் பாராட்டிய சசி தரூர், உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியிருக்காது என்றார்.
அந்நிய மண்ணில் தனது சொந்த தந்தையை ஒரு நிருபராக இஷான் தரூர் கேள்வி எழுப்பியது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
June 07, 2025 9:54 PM IST
அமெரிக்கா சென்ற சசி தரூரிடம் கேள்வி எழுப்பிய அவரது மகன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ


