Last Updated:
சீனாவின் டாங்லிங் நகரில் யாங்சே ஆற்றின் குறுக்கே உலகின் முதல் இரட்டை அடுக்கு கேபிள்-தொங்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. 9 ஆயிரம் டன் எடை சோதனை வெற்றிகரமாக முடிந்தது.
சீனாவின் டாங்லிங் நகரில் யாங்சே ஆற்றின் குறுக்கே உலகின் முதல் இரட்டை அடுக்கு கேபிள்- தொங்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 12 கிலோ மீட்டர் அளவிலான இந்தப் பாலம், எக்ஸ்பிரஸ் வே, இன்டர்சிட்டி ரயில்வே மற்றும் சரக்கு ரயில் தடங்களைக் கொண்டுள்ளது.
பாலத்தில் மேல் அடுக்கில் சாலைப் போக்குவரத்தும், கீழ் அடுக்கில் ரயில் போக்குவரத்து நடைபெறும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பிரதான பாதை, 988 மீட்டர் நீளத்தில், 6 வழிச் சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. 100 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கீழ் அடுக்கில் இரண்டு பயணிகள் ரயில் பாதைகள் மற்றும் இரண்டு சரக்கு ரயில் பாதைகள் உள்ளன. இந்தப் பாலம் அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்துவிடப்பட உள்ளது. உறுதித் தன்மையைச் சோதிக்கும் வகையில், 9 ஆயிரம் டன் எடை கொண்ட 214 டிரக்குகள் பாலத்தின் மீது அனுப்பட்டுச் சோதிக்கப்பட்டன.
தற்போது மின் இயந்திரத் திட்டங்கள், போக்குவரத்துப் பாதுகாப்பு வசதிகள் மற்றும் நடைபாதை அமைத்தல் ஆகிய பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
June 07, 2025 10:22 PM IST


