Last Updated:
காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, ரயில் என்ஜின் பகுதியில் அமர்ந்தபடி புதிய ரயில்வே பாலத்தில் பயணித்தார்.
ஜம்மு- காஷ்மீரின் ரியாஸி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, ”பஹல்காம் தாக்குதல் காரணமாக, ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் கட்டப்பட்டது. அதாவது, செனாப் ஆற்றின் குறுக்கே, ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில், 359 மீட்டர் உயரத்தில் ரயில்வே வளைவுப் பாலம் அமைக்கப்பட்டது. நிலநடுக்கத்தால்கூட பாதிக்கப்படாத வகையில் அமைக்கப்பட்ட இந்த ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து மேடையில் பேசிய அவர், இந்த நிகழ்ச்சி இந்தியாவின் ஒற்றுமை மற்றும் மன உறுதிக்கான கொண்டாட்டமாக அமைந்திருப்பதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இளைஞர்களின் கனவை கலைக்க நினைப்பவர்கள் முதலில் மோடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சவால் விடுத்தார்.
#WATCH | Katra, J&K | Prime Minister Narendra Modi says, “J&K had seen so much destruction that the people here had stopped dreaming. They had accepted terrorism as their fate. We have brought them out of this situation… The people here now want to see Jammu & Kashmir again… pic.twitter.com/lW2poSA5AL
— ANI (@ANI) June 6, 2025
இதனைத் தொடர்ந்து, அந்த பாலத்தில் பிரதமர் மோடி நடந்து சென்று பார்வையிட்டார். பின்னர், உலகின் உயரமான ரயில்வே இரும்பு பாலத்தில், ரயில் என்ஜின் பகுதியில் அமர்ந்தபடி பிரதமர் மோடி பயணித்தார்.
இதனையடுத்து, இந்தியாவின் முதல் கேபிள் ரயில் பாலமான அன்ஜி பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஜம்மு-காஷ்மீரின் கத்ரா-ஸ்ரீநகர் இடையிலான முதல் வந்தே பாரத் ரயிலையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
Jammu and Kashmir
June 06, 2025 4:00 PM IST


