வேட்பாளரை கத்தியால் குத்த முயற்சித்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ளது. அதேபோல ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் சேர்த்து நடக்கவுள்ளது.
மே 13ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காளஹஸ்தி சட்டமன்ற தொகுதியில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மதுசூதனன் ரெட்டி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் சுதிர் ரெட்டி போட்டியிடுகிறார்.
இந்நிலையில் சுதிர் ரெட்டி காளஹஸ்தி நகரில் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நபர் ஒருவர், சுதிர் ரெட்டியை நெருங்கி செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.
சுதிர் ரெட்டி அந்த நபருடன் செல்பி எடுத்துக்கொள்ள சம்மதம் தெரிவித்த நிலையில், இரண்டு பேரும் கைகுலுக்கி கொண்டதாகவும், அப்போது அந்நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுதிர் ரெட்டியை குத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. அங்கே இருந்த தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் அவரைப் பிடித்து விசாரணை செய்தனர்.
மகேஷ் என்ற அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என கூறப்படும் நிலையில் காளஹஸ்தி காவல் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார். வேட்பாளரை கத்தியால் குத்த முயற்சித்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…