Last Updated:
இந்திய வானிலை மையம் நிகழ்நேர தரவுகளை பொதுமக்களுக்குத் தடை செய்தது. தகவல் பெற பணம் செலுத்த வேண்டும். இதனால் இயற்கை பேரிடர் காலத்தில் தீவிர தாக்கம் ஏற்படும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கண்டனம்.
இந்திய வானிலை மையம் கடந்த மாதம் நிகழ்நேர தரவுகளைப் பொதுப் பயன்பாட்டிலிருந்து முடக்கியது.
இதுகுறித்து ஆர்டிஐயில் விளக்கம் கேட்டதற்கு நிகழ்நேரத் தரவுகள் (IMD-AWS Reports) இனி வானிலைத் துறை அதிகாரிகள் மட்டுமே பார்க்க முடியும். பொதுமக்கள் பயன்படுத்த முடியாது என இந்திய வானிலை மையம் அதிர்ச்சி பதிலைக் கொடுத்துள்ளது. மேலும், யாருக்கேனும் தகவல் தேவைப்பட்டால் ஐஎம்டி அதிகாரப்பூர்வ இணையத்தில் பணம் செலுத்தி தகவலைப் பெறலாம் எனச் சொல்லப்பட்டுள்ளது.
இதன் மூலம் நிகழ்நேர மழை அளவு, மழையின் தீவிரம், வெப்பநிலை, ஈரப்பதம் போன்றவற்றை தனியார் வானிலை ஆய்வாளர்கள் மட்டுமின்றி, அரசு அதிகாரிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என யாரும் அறிய முடியாத நிலை ஏற்படும்.
இதன் தாக்கம் இயற்கை பேரிடர்கள் காலத்தில் மிக தீவிரமாக இருக்கக்கூடும். பொதுமக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட வானிலைத் தரவுகளைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தடை விதிப்பது கண்டிக்கத்தக்கது எனத் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
June 05, 2025 5:18 PM IST


