Singapore: சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பியதாக ஆடவர் மீது இன்று (ஜூன் 5) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 7.20 மணியளவில் விமானத்தில் வெடிகுண்டு வைத்து தகர்த்த போவதாக அச்சுறுத்தும் சமூக ஊடகப் பதிவு குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
புதிய TOTO Match டிரா அறிமுகம்: “2 எண்கள் பொருந்தினால் டோட்டோ பரிசு” – முழு தொகுப்பு
அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம், அந்த நபரின் அடையாளத்தை தகவல் கொடுக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் விமான நிலைய காவல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அவர் அபுதாபிக்குச் செல்லும் விமானத்தில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக சிங்கப்பூர் காவல் படை (SPF) செய்திக் குறிப்பில் தெரிவித்தது.
ஓடுபாதையில் புறப்படவிருந்த எதிஹாட் விமானம், சாங்கி விமான நிலைய முனையம் 2 க்கு திரும்ப அழைக்கப்பட்டது, பின்னர் அசிம் ஷா என்ற அந்த 22 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 268A இன் கீழ், தீங்கு ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவலைத் தெரிவித்ததற்காக அந்த ஆடவர் மீது குற்றம் சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, S$50,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

