Last Updated:
12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்த உள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 30-ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் நவம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் இதற்காக 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 8 அணிகள் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளது. இருப்பினும், அந்த அணி பங்கேற்கும் போட்டிகள் எதுவும் இந்தியாவில் நடைபெறாது. அந்த வகையில், பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளும் இலங்கையில் நடைபெற உள்ளது.
இந்தியாவில் பெங்களூரு, சின்னசாமி, கௌகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் ஆகிய மைதானங்களும், இலங்கையில் கொழும்பு பிரேமதாசா மைதானமும் உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரை நடத்த உள்ளன.
தற்போது நடைபெற உள்ளது 13-வது ஐசிசி உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடராகும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
June 02, 2025 8:19 PM IST


