Last Updated:
சர்வதேச நாணய நிதியத்திடம் மிக அதிகமாக கடன் பெற்ற நாடுகள் பட்டியலில், பாகிஸ்தான் நான்காவது இடத்தில் இருக்கிறது.
ஆப்ரேஷன் சிந்தூரை இந்தியா வெற்றிகரமாக நடத்திய நிலையில் ரஷ்யாவிலிருந்து நல்ல தகவல் ஒன்று வந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பகல்காமில், பாகிஸ்தான் உதவியோடு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 28 பேர் உயிரிழந்தார்கள்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா ஆப்ரேஷன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த அதிரடி தாக்குதலில், ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள். இந்தியாவின் ராணுவ மற்றும் பொருளாதார தாக்குதலால் நிலைகுலைந்து போன பாகிஸ்தான், அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் திணறிது.
ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடம் மிக அதிகமாக கடன் பெற்ற நாடுகள் பட்டியலில், பாகிஸ்தான் நான்காவது இடத்தில் இருக்கிறது. அந்த நாடு போரில் ஈடுபட்டால், மிகவும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும். இந்த சூழலில், இந்தியா போர் நிறுத்தத்தை அறிவித்தது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் இந்தியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினாலும், ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட ஏவுகணை தடுப்பு அமைப்புகள் அவற்றைத் தடுத்து நிறுத்தின. அந்த வகையில், எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு மிகவும் சிறப்பாக செயல்பட்டது.
ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட இந்த எஸ் 400 அமைப்புகள், ஆபரேஷன் சிந்தூரின் போது வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன. 2018 ஆம் ஆண்டு, இந்தியா 5 எஸ் 400 ஏவுகணை அமைப்புகளை வாங்குவதற்கு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இவற்றில் 3 அமைப்புகள் இந்தியாவிடம் வழங்கப்பட்டன.
மீதமுள்ள 2 எஸ் 400 அமைப்புகள், 2025-26 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிடம் வழங்கப்பட்டு விடும் என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்தியாவுக்கான ரஷ்ய துணை தூதர் ரோமன் பாபுஷ்கின் இன்று தெரிவித்திருக்கிறார்.
June 02, 2025 8:33 PM IST


