Last Updated:
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவின் கச்சிதமான தாக்குதலில் பாகிஸ்தானில் இயங்கி வந்த 9 பயங்கரவாத நிலைகள் தாக்கி அழிக்கப்பட்டன.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் போர் விமானங்களில் சிலவற்றை இழந்ததாக முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவ்ஹான் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் கடந்த ஏப்ரல் 7, 8 மற்றும் 9ஆம் தேதிகளில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
இந்தியாவின் கச்சிதமான தாக்குதலில் பாகிஸ்தானில் இயங்கி வந்த 9 பயங்கரவாத நிலைகள் தாக்கி அழிக்கப்பட்டன. பாகிஸ்தானுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் சில விமானங்களைச் சுட்டு வீழ்த்திவிட்டதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது.
இதனையடுத்து, பாகிஸ்தானிடம் எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது என்பதை வெளிப்படையாகச் சொல்லவேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், பாதுகாப்புக் காரணங்கள் கருதி ராகுல் காந்தி கேட்ட கேள்விக்குப் பதில் தர மத்திய அரசு மறுத்துவிட்டது.
இந்தச் சூழலில் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவ்ஹான், “ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளில் சில தவறுகள் நடந்ததால், இந்திய விமானப்படை விமானங்களை இழக்க நேரிட்டதாக” கூறினார்.
ஆனால், எத்தனை விமானங்களை இழந்தோம் என்ற விவரங்களை வெளியிட அனில் சவ்ஹான் மறுத்துவிட்டார்.
June 01, 2025 7:25 AM IST
“இந்தியாவின் போர் விமானங்களில் சிலவற்றை இழந்தோம்…” – முப்படை தலைமை தளபதி அனில் சவ்ஹான் விளக்கம்


