140 கோடி இந்தியர்களின் முதல் தீர்மானம். பாகிஸ்தானின் ஒவ்வொரு துப்பாக்கித் தோட்டாக்களுக்கு நம்மிடமிருந்து பீரங்கி குண்டுகளால் பதிலடி தரப்பட்டுள்ளது.
சிந்தூர்(செந்தூரம்) இந்தியக் கலாசாரத்தில் ஒருங்கிணைந்தது. இது பெண்களின் வீரத்தைக் குறிக்கிறது. ராமரின் மீது தீவிர பக்தி கொண்ட ஹனுமான் தன் மீது பூசிக்கொண்டதும் செந்தூரம்தான். பூஜைகளின் போது சிந்தூர் வழங்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் வீரத்தின் அடையாளமாக சிந்தூர் மாறியுள்ளது.
பஹல்காம் தாக்குதல் நமது வளமான நாட்டின் அமைதியை சீர்குலைப்பதாக இருந்தாலும், எதிரிகளை அவர்களின் இடத்திலேயே அழித்துவிட்டோம்.
நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளாக இருந்தாலும் சரி, எல்லை தாண்டிய நடவடிக்கைகளாக இருந்தாலும் சரி, நமது நாட்டின் பெண்கள் பாதுகாப்பின் ஒருங்கிணைந்த கேடயமாக உள்ளனர்.” எனத் தெரிவித்தார்.
அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அஞ்சலி செலுத்தும் வகையில், அஞ்சல் தலை மற்றும் ரூ.300 மதிப்புள்ள நினைவு நாணயத்தையும் வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி.
இதையும் படிக்க: இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டன! முப்படை தலைமைத் தளபதி ஒப்புதல்?

