• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உங்களுக்கு சம்பள உயர்வு கிடைத்துள்ளதா..? மியூச்சுவல் ஃபண்டுகளில் கூடுதல் பணத்தை முதலீடு செய்வது எப்படி?

GenevaTimes by GenevaTimes
May 30, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
உங்களுக்கு சம்பள உயர்வு கிடைத்துள்ளதா..? மியூச்சுவல் ஃபண்டுகளில் கூடுதல் பணத்தை முதலீடு செய்வது எப்படி?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 30, 2025 3:51 PM IST

இந்த கூடுதல் வருமானத்தை எவ்வாறு செலவிடுவது என்பதைத் திட்டமிடத் தொடங்குவதில் ஆர்வமாக இருந்தாலும், அதை எவ்வாறு புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது என்பது தெரிந்துகொள்வது முக்கியம்.

மியூச்சுவல் ஃபண்ட்மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

வேலையில் சம்பள உயர்வு பெறுவது வெறும் பணம் சார்ந்த வெற்றி மட்டுமல்ல. வேலையில் உங்கள் முயற்சிகளை உறுதிப்படுத்தும் ஒரு உளவியல் ஊக்கமும் கூட. இந்த கூடுதல் வருமானத்தை எவ்வாறு செலவிடுவது என்பதைத் திட்டமிடத் தொடங்குவதில் ஆர்வமாக இருந்தாலும், அதை எவ்வாறு புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது என்பது தெரிந்துகொள்வது முக்கியம். பெரும்பாலான மாத சம்பளதாரர்கள் ஏப்ரல் மாதம் சம்பள உயர்வைப் பெறுகிறார்கள். உங்கள் சேமிப்பு உத்தியை, குறிப்பாக மியூச்சுவல் ஃபண்டுகளில் உங்கள் முதலீட்டுத் திட்டங்களை (எஸ்ஐபி) மறுபரிசீலனை செய்ய இது சிறந்த நேரம் ஆகும்.

மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் எவ்வாறு சேமிப்பது?:

சம்பளம் வாங்கும் தனிநபர்கள் ஒரு நிலையான மாதாந்திர வருமானத்தைப் பெறுகிறார்கள். அதிலிருந்து அவர்கள் தங்கள் வழக்கமான செலவுகளைச் செய்த பிறகு ஒரு பகுதியை சேமிப்பிற்கு துக்குகிறார்கள். பலர் இந்த சேமிப்புகளை எஸ்ஐபி மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தேர்வு செய்கிறார்கள். இவை சொந்தமாக வீடு வாங்குவது, குழந்தைகளின் கல்விக்கு நிதியளிப்பது அல்லது ஓய்வூதிய நிதியை உருவாக்குவது போன்ற நீண்ட கால இலக்குகளை கொண்டவை.

உங்கள் எஸ்ஐபி பங்களிப்புகளை எப்போது அதிகரிக்க வேண்டும்?:

உங்கள் சம்பள உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு ஏற்ப, ஆண்டுதோறும் எஸ்ஐபி பங்களிப்புகளை அதிகரிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உங்கள் சம்பள உயர்வுக்கு ஏற்ப செலவினங்களை அதிகரிப்பதற்கு பதிலாக, அதில் ஒரு பகுதியை உங்கள் முதலீடுகளை அதிகரிக்க ஒதுக்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் உங்கள் எஸ்ஐபி(SIP) தொகையை எவ்வாறு அதிகரிப்பது?:

எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யத் தொடங்கும்போது, ​​முதலீட்டாளர்கள் வருடாந்திர டாப்-அப் வசதியைத் தேர்வுசெய்யலாம். இதன் மூலம் அவர்கள் தங்கள் மாதாந்திர பங்களிப்பை ஒவ்வொரு ஆண்டும் ஒரு நிலையான சதவீதத்தில் (பொதுவாக 5–10%) அதிகரிக்க முடியும். உதாரணம்: நீங்கள் மாதத்திற்கு ரூ.20,000 எஸ்ஐபி-யில் முதலீடு செய்து, சராசரியாக 11% ஆண்டு வருமானத்தைப் பெற்றால், 15 ஆண்டுகளில் சுமார் ரூ.91–92 லட்சம் குவிப்பீர்கள்.

ஆனால் நீங்கள் வருடத்திற்கு 5% முதலீட்டை அதிகரித்தால், அதே முதலீடு 15 ஆண்டுகளில் தோராயமாக ரூ.1.20 கோடியாக வளரக்கூடும். இந்த சிறிய மாற்றம் உங்கள் நிதி இலக்குகளை நோக்கிய உங்கள் பயணத்தை கணிசமாக துரிதப்படுத்தும். சம்பள உயர்வு பெற்ற பிறகு ஒவ்வொரு ஆண்டும் உங்கள் முதலீடுகளை மறு மதிப்பீடு செய்யலாம். உங்கள் வருமானம், செலவுகள் மற்றும் ஒட்டுமொத்த நிதித் திட்டத்தைப் புதிதாகப் பாருங்கள். உங்கள் புதுப்பிக்கப்பட்ட பணப்புழக்கத்தின் அடிப்படையில், உங்கள் எஸ்ஐபி-களை எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.

உதாரணமாக, பங்குச்சந்தை வளர்ச்சி காரணமாக நீங்கள் ஏற்கனவே பங்குகளில் அதிகமாக முதலீடு செய்து கொண்டிருந்தால், கடன் அல்லது கலப்பின நிதிகளில் முதலீடு செய்வதைப் பற்றி பரிசீலிக்கவும். தங்கத்தின் மீதான உங்கள் முதலீடு குறைவாக இருந்தால், தங்க நிதி அல்லது பல சொத்து நிதி சிறப்பானதாக இருக்கும்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

உங்களுக்கு சம்பள உயர்வு கிடைத்துள்ளதா..? மியூச்சுவல் ஃபண்டுகளில் கூடுதல் பணத்தை முதலீடு செய்வது எப்படி?

Read More

Previous Post

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் | Asian Athletics Championships India wins 3 golds in a single day

Next Post

ரஷ்யா – இந்தியா – சீனா கூட்டமைப்பை மீட்டெடுக்க தீவிர முயற்சி: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தகவல் | Moscow genuinely interested in revival of Russia-India-China troika format: Lavrov

Next Post
ரஷ்யா – இந்தியா – சீனா கூட்டமைப்பை மீட்டெடுக்க தீவிர முயற்சி: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தகவல் | Moscow genuinely interested in revival of Russia-India-China troika format: Lavrov

ரஷ்யா - இந்தியா - சீனா கூட்டமைப்பை மீட்டெடுக்க தீவிர முயற்சி: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தகவல் | Moscow genuinely interested in revival of Russia-India-China troika format: Lavrov

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin