டோஜின் முக்கியப் பணி, ‘அரசின் தேவையில்லாத செலவுகளைக் குறைப்பது’ தான். இது சம்பந்தமாக பல அதிரடி நடவடிக்கைகளை கொண்டு வந்தார்.
இதில், கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பெடரல் பணியாளர்களை பணிநீக்கம் செய்தது அல்லது பணியில் இருந்து ஓய்வுபெற வைத்தது… பெடரல் பணியாளர்களின் கிரெடிட் கார்டை குறைத்தது போன்ற பல நடவடிக்கைகள் அடுங்கும்.
ஆட்குறைப்பு, நிதி குறைப்பு போன்றவை அரசின் செயல்பாட்டை மெதுவாக்கும் என்று எழுந்த விமர்சனங்களுக்கு எலான் மஸ்க்கும் சரி… ட்ரம்பும் சரி செவிமடுக்கவில்லை.

சமீபத்தில், ட்ரம்ப் ‘ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்’ என்ற வரி குறைப்பு சட்டத்தை அமல்படுத்தினார்.
கடந்த செவ்வாய்கிழமை (மே 27), இந்த சட்டம் குறித்து பேட்டி ஒன்றில் எலான் மஸ்க், “இந்தச் சட்டம் பெடரலின் செலவீனத்தை அதிகரிக்கும். டோஜ் எதற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கமே எட்டப்படாது.
ஒன்று, இந்த சட்டம் பெரிதாக இருக்க முடியும் அல்லது அழகாக இருக்க முடியும். இரண்டுமாக இருக்க முடியாது. நான் நினைத்ததை விட, அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை மோசமாக இருக்கிது.
நான் போதுமான அளவு செய்துவிட்டேன். இனி அரசியல் நன்கொடைகள் எதுவும் செய்யாமல், எனது நிறுவனங்களின் மீது கவனம் செலுத்தப் போகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

