ஆக, இந்த வரி விதிப்புகள் பிற நாடுகளை மட்டுமல்லாமல், அமெரிக்கவையும் பாதிக்கும் என்று நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘இறக்குமதி வரி விதிப்பை ட்ரம்ப் மட்டுமே முடிவு செய்ய முடியாது. காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று நேற்று முன்தினம் (ஏப்ரல் 28) உத்தரவிட்டது. மேலும், இறக்குமதி வரி விதிப்பை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. இந்தத் தீர்ப்பிற்கு ட்ரம்ப் அரசாங்கம் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தது.
இதனையடுத்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், ‘இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, இறக்குமதி வரி விதிப்பிற்கு விதிக்கப்பட்ட ரத்து நிறுத்தப்படுகிறது’ என்று கூறியுள்ளது.
இது தற்காலிக நிறுத்தம் தானே தவிர, நிரந்தரமானது அல்ல. இந்த வழக்கின் விசாரணை முடிந்து இறுதித் தீர்ப்பு வரும்போது தான் ட்ரம்பி-க்கு வெற்றியா என்பது தெரியவரும்.

