2ம் தவணை இழப்பீடு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் அல்லது பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப்பின் வெளியிட வேண்டும் என சட்ட விதிகள் இருக்க, வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி இழப்பீடு வழங்குவதை தாமதிக்கக்கூடாது எனத் தெளிவாக இருந்தும், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரே, வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி, 2ம் தவணை இழப்பீடை தர மறுப்பது சட்டவிரோதம் ஆகும்.

