கட்டுமானத் தளத்தில் வெளிநாட்டு ஊழியர்களை பதாகைகளுடன் ஒன்றுகூடச் செய்ததாக இருவர் மீது இன்று (மே 27) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதாவது, தாங்கள் வேலை செய்த நிறுவனத்திற்கு கொடுப்பட வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் வெளிநாட்டு ஊழியர்கள் அந்த கட்டுமானத் தளத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.
திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் செய்யவிருந்த ஆடவர் விமான நிலையத்தில் கைது
ஊழியர்களை அவ்வாறு செய்ய வேண்டும் என்று தூண்டிவிட்டு ஏற்பாடு செய்த அபெக்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தில் இயக்குநராக இருந்த 33 வயதான ரெபேக்கா ரூபினி ரவீந்திரன் மீது மொத்தம் 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அதே போல இந்த குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் 36 வயதான வீ டெரிக் மகேந்திரன் என்பவர் மீது 11 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
வெளிநாட்டு ஊழியர்களை அவர்களின் வேலை அனுமதி (work passes) நிபந்தனையை மீறத் தூண்டியதாகவும் அவர்கள் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் செய்யத்தூண்டிய இருவர்
ரெபேக்கா உரிய அனுமதியின்றி பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததாகவும், வீ டெரிக் அந்த கூட்டங்கள் சொன்னவாறு நடந்ததா என்று நேரில் சென்று பார்வையிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இவர்கள் இருவரும் சேர்ந்து தான் வெளிநாட்டு ஊழியர்களை குற்றம் செய்யத்தூண்டியதாக சொல்லப்படுகிறது. ஏனெனில், ஒன்று கூடிய 15 வெளிநாட்டு ஊழியர்களும் ரெபேக்கா நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையால், வெளிநாட்டு ஊழியர்களுக்கு தாமாகவே முன்வந்து தவறு செய்யும் எண்ணம் ஏதும் இல்லை என்றும் தங்களுடைய முதலாளி தூண்டுதலின் பேரில் தான் அவர்கள் அவ்வாறு ஒன்றுகூடியதாகவும் காவல்துறை கூறியது.
இதனால் வெளிநாட்டு ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்று காவல்துறை சுட்டிக்காட்டியது.
சிங்கப்பூரில் இருந்து கோயம்புத்தூர்… “சுமார் 5 கோடி மதிப்பு” – ஆடவரை கைது செய்த அதிகாரிகள்
கடந்த ஆண்டு, ஜாலான் சாதுவில் உள்ள கட்டுமான தளத்தில் 6 வெளிநாட்டு ஊழியர்களும், தெங்கா கார்டன் வாக்கில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் 9 வெளிநாட்டு ஊழியர்களும் பதாகைகளுடன் ஒன்றுகூட ரெபேக்கா உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
Work Pass விதிமீறல் சட்டம்
அனுமதியின்றி பொதுக்கூட்டம் அல்லது போராட்டம் ஏற்பாடு செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் S$5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
வெளிநாட்டு ஊழியரை தனது வேலை அனுமதி விதிமுறைகளை மீறத் தூண்டிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை, S$10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

