ஆர்.பி.உதயகுமாரின் பேட்டி
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், “புரட்சி தமிழர் ஐயா எடப்பாடியார் அவர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், ‘அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதுமில்லை’ என்ற அப்பர் திருமொழிக்கு ஏற்ப, அவர் எந்த மிரட்டலையும் பொருட்படுத்தாமல், மக்களுக்காக உழைத்து வருகிறார். மக்களுக்காகவே தனது உயிரை அர்ப்பணிக்கும் உத்தமரான எடப்பாடியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தொண்டருக்கும், ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கிறது,” என்று உதயகுமார் தெரிவித்தார். மேலும், இரண்டு கோடி அதிமுக தொண்டர்களின் வேண்டுகோளாகவும், அவர்களின் மனக்குமுறலாகவும் இதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

