Last Updated:
முகமது யூனுஸ் வங்கதேசத்தை அமெரிக்காவுக்கு விற்க முயற்சித்ததாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார்.
வங்கதேசத்தையே அமெரிக்காவுக்கு விற்க இடைக்கால ஆட்சியாளர் முகமது யூனுஸ் முயற்சிப்பதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த ஆண்டு மாணவர் எழுச்சிப் போராட்டத்தால் அந்நாட்டில் இருந்து அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் வங்கதேசத்தின் இடைக்கால நிர்வாகியாக உள்ளார்.
இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த சூழலில், தனது தலைமையிலான அரசை கவிழ்க்க தீவிரவாதக் குழுக்களுடன் முகமது யூனுஸ் கைகோர்த்ததாக ஷேக் ஹசீனா குற்றம் சாட்டினார்.
வங்கதேசத்தில் போராட்டத்தை அமெரிக்கா தூண்டியதாகவும், செயின்ட் மார்டின்ஸ் தீவை அமெரிக்காவுக்கு தர மறுத்ததால்தான் போராட்டம் தீவிரமடைந்ததாகவும் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். தற்போது செயின்ட் மார்ட்டின் தீவை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த வங்கதேசத்தையே அமெரிக்காவிடம் விற்பதற்கு முகமது யூனுஸ் முயன்று வருவதாக ஷேக் ஹசீனா சாடியுள்ளார்.
May 26, 2025 10:15 PM IST
வங்கதேச போராட்டத்தின் பின்னால் அமெரிக்கா? – முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பகீர் குற்றச்சாட்டு


