Last Updated:
வம்சி கிருஷ்ணா, வேதாந்துவின் இணை நிறுவனர், கல்வி தொழில்நுட்பத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி, பின்தங்கிய மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கினார்.
ஒருவர் ஏதாவது ஒரு விஷயத்தில் ஆர்வமாக இருந்து, அதை நிறைவேற்ற உறுதியுடன் இருக்கும்போது, அதற்காக இரவு பகல் பாராமல் கடினமாக உழைக்கிறார்கள். அப்படிதான் கல்வியின் மீது பேரார்வம் கொண்ட ஒரு நபர் அந்தத் துறையில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல், சிறந்த கல்வியை பெற விரும்பும் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் பிறருக்கு புதிய கதவுகளைத் திறந்ததோடு ஒட்டுமொத்தமாக கல்வி தொழில்நுட்பத் துறையையே மாற்றியமைத்தார்.
யார் இந்த வம்சி கிருஷ்ணா?
வேதாந்துவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான வம்சி கிருஷ்ணா, எப்போதும் கல்வியின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். தன்னுடைய இளம் வயதிலேயே இரண்டு கல்வி தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கி, அதன் மூலம் நவீன கல்வி முறையை மாற்றுவதற்கான வழியைக் கண்டுபிடித்தார். வம்சி மும்பையில் உள்ள ஐஐடி-யில் பொறியியலில் பிடெக் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
கல்வியில் சிறந்து விளங்கியதோடு மட்டுமல்லாமல், வலுவான தொழில்நுட்ப மற்றும் தலைமைத்துவ குணங்களும் வம்சிக்கு இருந்தன. அதோடு டெக்ஃபெஸ்ட் மற்றும் கைப்பந்து போட்டிகள் போன்ற செயல்பாடுகளிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டார்.
கல்லூரி நாட்களிலிருந்தே, கல்வித்துறையில் பெரிய அளவில் சாதிக்க விரும்பினார்வம்சி. ஆனால், அவரது தொழில்முறை பயணம் லார்சன் & டூப்ரோவில் மேலாண்மை பயிற்சியாளராகத் தொடங்கியது. அங்கு அவருக்குக் கிடைத்த அனுபவம் அவரது தலைமைப் பண்புகளை வடிவமைத்தது. இது கல்வித்துறையில் அவரது பணியை மேலும் மேம்படுத்த உதவியது.
ஆரம்பத்தில், வம்சியும் அவரது கல்லூரி நண்பர்களும் பஞ்சாபில் உள்ள சிறிய கிராமத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு கல்வி கற்பிக்கத் தொடங்கினர். இதுதான் அவரது கல்விப் பயணத்திற்கு தொடக்கமாக அமைந்தது. ஆச்சரியப்படும் விதமாக, இவர்கள் கற்றுக்கொடுத்த பதினொரு மாணவர்களில் ஏழு பேர் நாட்டின் சிறந்த ஐஐடி-களில் தேர்ச்சி பெற்றனர். அதிகபட்ச மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற வம்சியின் விருப்பத்தை இது மேலும் அதிகமாக்கியது.
வம்சி கிருஷ்ணா தனது முதல் ஸ்டார்ட்அப்பான லக்ஷ்யா நிறுவனத்தை ஏப்ரல் 2006-ல் தொடங்கினார். தொலைதூர மாணவர்களுக்கு கல்வியை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதே லக்ஷ்யாவின் நோக்கமாகும்.
பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதற்காக நான்கு ஐஐடி மாணவர்கள் இந்த நிறுவனத்தை நிறுவினார். லக்ஷ்யா ஆண்டுதோறும் 5,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சேவை செய்து 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்தியது.
ஏப்ரல் 2014-ம் ஆண்டு வேதாந்துநிறுவனத்தை தொடங்கிய வம்சி கிருஷ்னா, அதன் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார். பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டாலும், இத்தனை ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து மிகவும் வெற்றிகரமான கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களில் ஒன்றாக மாறியுள்ளது. 2025-ம் ஆண்டு நிலவரப்படி, வேதாந்துநிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.400 கோடிக்கு மேல்இருக்கும் எனக் கூறப்படுகிறது


