Last Updated:
தாய்லாந்தில் பாங்காக்கில் ஒரு பூனை போலீஸ்காரர்களை கீறியதால் கைது செய்யப்பட்டது. அதன் உரிமையாளர் வந்ததும், பூனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது.
இதுவரை காவல் நிலையத்தில் குற்றவாளிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒரு போலீஸ்காரர் ஒரு விலங்குக்கு எதிராக புகார் அளிப்பதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? ஆம் தாய்லாந்தின் பாங்காக்கில் ஒரு பூனையை போலீசார் கைது செய்தனர். பின்னர், உரிமையாளர் வந்ததும், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். உண்மையில், ஒரு பூனை காவல் நிலையத்திற்குள் வந்ததும் அங்கிருந்த போலீஸ்காரர்களைக் கீறிக் கடித்தது. இதற்குப் பிறகு போலீசார் அந்த பூனையை கைது செய்து அவரது முகத்தை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். இந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
காவல்துறை அதிகாரியான டா பரிந்தா பாகிசுக் இந்த சம்பவத்தை தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டுள்ளார். அதில் அந்தப் பூனையை, உள்ளூர்வாசி ஒருவர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததாகவும், அந்த பூனையை போலீசார் வரவேற்றனர் என்று கூறியுள்ளார். ஆனால் திடீரென்று அது ஆக்ரோஷமாக மாறி, சில போலீஸ்காரர்களைக் கடித்து கீறியது என்றும் கூறியுள்ளார்.
அந்த அதிகாரி பூனையின் படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டு, ‘இந்தப் பூனை காவல்துறையினரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது’ என்று நகைச்சுவையாக எழுதினார். மேலும் அதில் அவர் காவலில் எடுக்கப்பட்டார் என்றும். தயவுசெய்து இந்த புகைப்படத்தை பகிரவும், அப்போதுதான் அதன் உரிமையாளர் வந்து இதை ஜாமீனில் விடுவிக்க முடியும்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த பிறகு, பலர் பூனையைத் தத்தெடுப்பதில் ஆர்வம் காட்டினர். இருப்பினும், அதன் உண்மையான உரிமையாளரைக் கண்டுபிடிப்பதே அவர்களின் நோக்கம் என்று அதிகாரி பதிவில் தெளிவுபடுத்தினார்.
பூனையின் உரிமையாளர் மறுநாளே காவல் நிலையத்திற்குச் சென்றார். பூனையை அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்கு சற்று முன்பு, பாகிசுக் ஒரு சுவாரஸ்யமான காவல் அறிக்கையைத் தயாரித்தார். அதில் ‘எனக்குப் பசிக்குது.’ நான் யாரையும் புண்படுத்த நினைக்கவில்லை, என்று அந்த அறிக்கையில் எழுதப்பட்டிருந்தது. இதில் சிறப்பு என்னவென்றால், பூனையும் அதன் பாதங்களால் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டது. அதன் பிறகு பூனைக்கு எச்சரிக்கை விடுத்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் கூறியிருந்தார்.
இந்த பதிவு சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டதை அடுத்து வைரலாகி நெட்டிசன்கள் கருத்தை பெற்றது. அதில் ஒரு யூசர், நான் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் அழகான குற்றம், என்று எழுதினார். இன்னொரு யூசர், இந்தக் கதையை நான் என் பூனைகளிடம் சொல்லிவிட்டேன், அவை இனிமேல் என் சோபாவை கீறுவதை நிறுத்திவிடும் என நம்புகிறேன், என்று வேடிக்கையாக பதிலளித்துள்ளார். மற்றொரு யூசர், இந்த அதிகாரி கனிவானவர், நகைச்சுவை உணர்வு மிக்கவர்” என்று கூறியுள்ளார்.


