இவர்கள் மட்டுமின்றி அனுபவ வீரர்களான கேஎல்.ராகுல், ஜடேஜா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோருக்கும், அபிமன்யூ ஈஸ்வரன், துருவ் ஜூரெல், நிதிஷ்குமார் ரெட்டி, பிரஷித் கிருஷ்ணா உள்ளிட்ட இளம் வீரர்களுக்கும் சமபலமாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இளம் புயல்களின் துடிப்பான ஆட்டமும், மூத்த வீரர்களின் அனுபவ ஆட்டமும் சேர்ந்து இந்திய அணியை துடிப்புடன் வைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த கலவையான அணி இங்கிலாந்து மண்ணில் பிரகாசிக்குமா என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


