மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் அமெரிக்காவின் ராணுவ செயல்பாடுகளுக்கு இந்த தீவு இன்றியமையாதது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தற்போது 2500 அமெரிக்க பணியாளர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
நாட்டின் பாதுகாப்புக்கு இந்த தீவில் ராணுவ தளம் இருப்பது மிகவும் அவசியமானது எனக் கருதும் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், இந்த தீவை இங்கிலாந்து 100 ஆண்டுகளுக்கு குத்தகை எடுக்கும்படியான நிபந்தனையை ஒப்பந்தத்தில் முன்வைத்துள்ளார்.
இதற்காக மொரீஷியஸுக்கு 101 மில்லியன் யூரோக்கள் (சுமார் 11 ஆயிரம் கோடி) வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். இதனால் சாகோஸ் தீவின் இறையாண்மை மொரீஷியஸ் தீவுக்கு கைமாறினாலும், இங்கிலாந்து – அமெரிக்கா ராணுவ உறவு நிலைத்திருக்கும்.
இந்தியாவின் நிலைப்பாடு
காலனியாதிக்க வரலாற்றைக் கொண்டுள்ள நாடான இந்தியா, இந்த ஒப்பந்தத்தை ஒரு “மைல்கல் சாதனை’ எனக் கூறி வரவேற்றுள்ளது.
காலனியாதிக்கத் தடங்களை அழிக்கும் நடவடிக்கைகளின் பகுதியாக, மொரீஷியஸ் இந்த தீவின் இறையாண்மையைப் பெறுவதற்கு இந்தியா நீண்டகாலமாக ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

