Last Updated:
கர்நாடகா சந்தபுரா ரயில்வே பாலம் அருகே சிறுமியின் உடல் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு. காவல்துறை தீவிர விசாரணை.
கர்நாடகா மாநிலம், சந்தபுரா எனும் இடத்தில் ரயில்வே பாலம் அருகே ஒரு சிறுமியின் உடல் சூட்கேஸில் அடைக்கப்பட்டு கிடந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள ஆனேகல் பகுதி அருகே அமைந்திருக்கும் சந்தபுரா எனும் இடத்தில் ரயில்வே பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பாலத்தின் அருகே சென்ற சிலர் அங்கு ஒரு சூட்கேஸ் இருப்பதை கண்டுள்ளனர். மேலும், அது சந்தேகத்திற்குரியதாகவும், அதில் இருந்து துர்நாற்றம் வந்ததாலும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த சூட்கேஸை கைப்பற்றி பார்த்தபோது, அதில் ஒரு சிறுமியின் உடல் கண்டெடுத்துள்ளனர். இதனைக் கண்டதும் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்தத் தகவல் அந்தப் பகுதியில் இருந்த மக்களுக்கும் தெரியவந்ததும் அப்பகுதி முழுக்க பரபரப்பு ஏற்படுத்தியது.
இதனையடுத்து காவல்துறையினர், அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமி வேறு ஒரு இடத்தில் கொலை செய்து, பின் உடலை சூட்கேஸில் அடைத்து, ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்திருக்கலாம் என இந்த மரணம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
கொலையுண்ட சிறுமி, 10 முதல் 12 வயதிற்குள்ளானவராக இருக்கலாம். இறந்த சிறுமியின் பெயர், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், என அவர் தொடர்பான எந்த அடையாளமும் தற்போது வரை கிடைக்காததால் காவல்துறையினர் முதலில் இறந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், இந்த மரணம் குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறையின் விசாரணையில் தான் இந்த மரணம் எப்படி நடந்தது, மரணித்திருக்கும் சிறுமி யார், ஏன் கொலை செய்யப்பட்டார், எப்படி கொலை செய்யப்பட்டார், கொலை செய்தது யார் உள்ளிட்ட விஷயங்களுக்கு விடை கிடைக்கும்.
கர்நாடகாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்.. ரயில்வே மேம்பாலம் அருகே கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸால் பரபரப்பு


