புது டெல்லியில் உள்ள ஜனநாயகத்திற்கான பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (PRIDE) நடைபெறும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் கலந்து கொள்வதற்காக, 20 இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நான்கு மூத்த பாராளுமன்ற அதிகாரிகள் உட்பட 24 பிரதிநிதிகள் குழு இந்த வாரம் இந்தியாவுக்குச் செல்லவுள்ளது.

துணை சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலிஹ் தலைமையிலான குழுவை, இன்று கொழும்பில் உள்ள இந்தியா ஹவுஸில் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வரவேற்றார்.
மே 26 முதல் 30 வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த ஒரு வார கால நிகழ்ச்சியில், சட்டமன்ற மற்றும் வரவுசெலவுத் திட்ட நடைமுறைகள், நாடாளுமன்றக் குழு அமைப்புகள் மற்றும் நிர்வாக கட்டமைப்புகள் குறித்து கவனம் செலுத்தப்படும். பங்கேற்பாளர்கள் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை ஆராய்வதுடன் டிஜிட்டல் தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் நகர்ப்புற இயக்கம் ஆகியவற்றில் முன்னேற்றங்களைக் காண்பிக்கும் களப் பயணங்களில் ஈடுபடுவார்கள்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 2025 இல் இலங்கைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

