யாழில் (Jaffna) இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த தங்கவேலு
கலைச்செல்வன் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உடல் சுகயீனம்
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் மது மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், நேற்று (20) அதிகாலை நான்கு மணியளவில் உடல் சுகயீனம் ஏற்பட்டு இரத்த வாந்தி
எடுத்துள்ளார்.
பின்னர் காலை ஐந்து மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
இருப்பினும், சிகிச்சை பலனின்றி பி.ப 1.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

அவரது
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
சாட்சியங்களை யாழ் காவல்துறையினர் நெறிப்படுத்திய நிலையில், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

