நிலநடுக்கத்தால் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அங்குள்ள பல கட்டிடங்கள் நிலைகுலைந்துள்ளன.
மேலும் ஒரு மீட்டர் உயர அலைகள் பதிவாகலாம் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
பிலிப்பைன்சின் சில கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை உயரமான இடங்களுக்கு வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்திருந்தனர்.
மேலும் சிங்கப்பூருக்கு சுனாமி பாதிப்பு ஏற்படாது என்றும், அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

