ட்1ரம்பின் கருத்துக்கு பதிலளித்த மராத்தா வர்த்தகம், தொழில்கள், மற்றும் வேளாண்மை சபையின் (எம்சிசிஐஏ) இயக்குநர் ஜெனரல் பிரசாந்த் கிர்பேன் கூறியதாவது,
”இந்தியா, சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளை தவிர்த்து அமெரிக்காவில் ஐபோன்களை தயாரிக்க முடிவு செய்தால் அதன் விலை 3,000 டாலர்களாக அதிகரிக்கும். இது, இந்தியாவில் தயாரிக்கும் செலவுடன் ஒப்பிடும்போது 3 மடங்கு அதிகம். அப்படி தயாரிக்கும் ஐபோனை 3,000 டாலர்களை கொடுத்து அமெரிக்க நுகர்வோர்கள் வாங்க தயாராக இருப்பார்களா? என்பதை ஆப்பிள் நிறுவனமும், அமெரிக்க நிர்வாகமும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
ஆப்பிளின் உற்பத்தியில் 80 சதவீதம் சீனாவில் நடக்கிறது. இதனால் அங்கு 50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான திட்டங்களை அறிவித்தபோது, விநியோகச் சங்கிலியை பன்முகப்படுத்த சில உற்பத்தி மையங்களை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்ற வேண்டிய நிலை இருந்தது.
எனவே, வேலைவாய்ப்பு, உற்பத்தி சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தன. அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயரவில்லை” என்று கூறியிருந்தார்.
ஆப்பிள் நிறுவனத்தால் அமெரிக்காவில் லாபகரமான உற்பத்தியே தொடர முடியாது என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு முற்றிலும் ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியை மாற்றுமா என்பது பலரின் கேள்விகளாக உள்ளது. இதனால் ஏற்படும் சவால்களையும் இழப்புகள் குறித்தும் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.. ட்ரம்பின் கருத்து வர்த்தக உலகில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!

