ஏப்ரல் 2024இல் தொடங்கப்பட்ட சிப் அடிப்படையிலான இ-பாஸ்போர்ட்கள், தற்போது பாஸ்போர்ட் சேவா திட்டம் 2.0இன் கீழ் பல்வேறு நகரங்களில் கிடைக்கின்றன. தற்போது, சென்னை, ஜெய்ப்பூர், ஹைதராபாத், நாக்பூர், அமிர்தசரஸ், கோவா, ராய்ப்பூர், சூரத், ராஞ்சி, புவனேஸ்வர், ஜம்மு மற்றும் சிம்லா போன்ற நகரங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களில் இ-பாஸ்போர்ட்டுகள் கிடைக்கின்றன. இது விரைவில் பல மாநிலங்கள் மற்றும் நகரங்களிலும் தொடங்கப்படும்.
எந்த நாடுகளில் சிப் மூலம் இயங்கும் இ-பாஸ்போர்ட்கள் உள்ளன?
இந்த தொழில்நுட்பமானது அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, மெக்சிகோ, கனடா, ஜப்பான் உட்பட 120க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்த நடவடிக்கையானது மோசடியைத் தடுக்கிறது மற்றும் இந்தியர்களுக்கான விரைவான குடியேற்ற செயல்முறைகளை துரிதப்படுத்துகிறது. பல நகரங்களில் 2024இல் பாஸ்போர்ட்களை மேம்படுத்தும் பணி தொடங்கியது.
ஏன் இந்த மாற்றம்?
2023ஆம் ஆண்டில் 1.5 பில்லியனுக்கும் அதிகமான விமான பயணங்கள் பதிவு செய்யப்பட்டன. இது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல நாடுகள் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை நோக்கித் திரும்பின. இந்த பயோமெட்ரிக் இ-பாஸ்போர்ட்கள் ஆனது வலுவான பாதுகாப்பை வழங்குகின்றன, மோசடியை தடுக்கின்றன மற்றும் பயண அனுபவத்தை மேம்படுத்துகின்றன.
பயோமெட்ரிக்-இ-பாஸ்போர்ட்களில் RFID பொருத்தப்படும்:
இந்த புதிய இ-பாஸ்போர்ட்டில் ரேடியோ ஃப்ரீகுவன்சி ஐடென்டிஃபிகேஷன் (RFID) சிப் மற்றும் ஆண்டெனா உள்ளது. மேலும், இந்த சிப்பில் முகத்தின் படங்கள், கைரேகைகள், பெயர், பிறப்பு மற்றும் பாஸ்போர்ட் எண் ஆகியவற்றைச் சேமிக்கும் திறன் கொண்டது. இந்த தரவானது பேசிக் ஆக்சஸ் கன்ட்ரோல் (BAC), பாஸிவ் ஆதென்டிபிகேஷன் (PA) மற்றும் எக்ஸ்டெண்டெட் ஆக்சஸ் கன்ட்ரோல் (EAC) போன்ற இன்டர்நேஷனல் என்கிரிப்ஷன் ஸ்டாண்டர்ட்ஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது.
விண்ணப்ப செயல்முறை:
இ-பாஸ்போர்ட்டின் விண்ணப்ப செயல்முறை பயனர் பிரெண்ட்லி ஆக உள்ளது. அதாவது ஒருவர் பாஸ்போர்டை பெற, பாஸ்போர்ட் சேவா போர்டல் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் தங்கள் உள்ளூர் பாஸ்போர்ட் சேவா கேந்திரா அல்லது தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திராவிற்குச் சென்று பயோமெட்ரிக் தரவை வழங்கலாம்.
இ-பாஸ்போர்ட்டின் முக்கிய நன்மைகள்:
இந்த மாற்றங்கள் ஆனது இந்தியாவில் பேப்பர்லெஸ் டாக்குமெண்ட் இல்லாத எதிர்காலத்தை நோக்கி நகர்கிறது என்பதைக் காட்டுகின்றன. பாஸ்போர்ட்டின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், அதில் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்ட சிப் உள்ளது. இது போலியான ஆவணங்களைத் தயாரித்தல், போலியான பாஸ்போர்ட் தயாரித்தல் மற்றும் அடையாளத் திருட்டு போன்ற அபாயங்களைத் தடுக்கிறது. இந்த சிப் பாஸ்போர்ட் சரிபார்ப்பு செயல்முறையை விரைவுபடுத்துகிறது. இது உங்கள் பயணத்தை சீராகச் செய்யும்.
சிப் அடிப்படையிலான இ-பாஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகம்…! என்ன ஸ்பெஷல்… முழு விவரங்கள் இதோ…

